உயிர் பிரிந்த பின்னும் பாபா துணையாக இருப்பார் - 8.1.2019 மரணத்துக்குப் பிந்தைய காலகட்டங்களில் இந்துக்கள் கடைபிடிக்கும் கடமைகளையும் சடங்குகளையும் சாய்பாபா மறுத்தவரல்லர். அப்படிப்பட்ட சடங்குகளை சிரத்தையாய் செய்து முடிப்பதன் மூலம் விடுபட்டுப் போன ஆன்மாவுக்கு சில நல்ல நிகழ்வுகள் நடக்கும் என நம்பினார் அவர். ஆன்மா பிரியும்போதும் பிரிந்த பின்னரும், அதுபோக வேண்டிய பாதையினை சிரமமின்றி வழிநடத்திக் காட்டிக் கொடுக்கும் ஒப்புயர்வற்ற சக்தியினைக் கொண்டு நிகழ்ந்தார் அவர். சாய்பாபா சொல்லியிருக்கிறார் ; "என் பக்தன் ஆயிரமாயிரம் மைல்கள் தள்ளி இறந்தாலும், அவனது ஆவியை என்னிடமிழுத்து வந்து அது சிரமமின்றி பிரயாணித்து கரை சேர நான் வழிவகை காட்டித் தருவேன்." என்று!
வெற்றி உனக்கு நிச்சயம் - 9.1.2019 "பாபா ! நிபாட்டில் நாளை விசாரணை. வெற்றி கிடைக்க ஆசீர்வதிக்க வேண்டும். புறப்படுவதற்கு உத்தரவு வேண்டுகிறேன் !" என்றார் பாவ் சாஹேப் துமால். "வெற்றி உனக்கு நிச்சயம் வேண்டுமென்றால் பத்து நாட்கள் ஷீர்டியில் இருந்து பஜனையில் கலந்து கொள் !" என்றார் பாபா. "பாபா ! நாளை என் கட்சிக்காரரை விசாரிக்கப் போகிறார்கள். நான் கோர்ட்டில் நாளை கட்டாயம் இருந்தாக வேண்டுமே !" என்று துமால் கலக்கத்துடன் பாபாவிடம் கேட்க, பாபாவோ கண்களை மூடி தியானத்தில் ஆழ்ந்துவிட்டார். பாபாவிடமிருந்து உத்தரவு வராததால், வேறு வழியின்றி பத்து நாட்களும் துமால் ஷீரடியிலேயே தங்கி பாபா தரிசனத்திலும், பஜனையிலும் , நிவேதனம் தயாரிப்பதுமாக இருந்துவிட்டார். நிபாட் பயணத்தை கைவிட்டார். பத்தாவது நாள், "நீ நிபாட்டுக்கு புறப்படு !" என்றார் பாபா. பாபாவின் திருவடிகளை வணங்கிவிட்டு உடனடியாக நிபாட்டை சென்றடைந்தார் துமால். கோர்ட்டுக்கு சென்றதும், "பத்து நாட்களுக்கு முன்பாக ஜட்ஜ்க்கு அடி வயிற்றில் திடீரென்று கடுமையான வலி ஏற்பட்டதாகவும், ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து நேற்றுதான் வீடு திரும்பியதாகவும், அதனால் விசாரணை இன்றுதான் தொடங்கவிருப்பதாகவும்" சக வக்கீல்கள் கூறவும், 'பாபாவின் சர்வசக்தி வாய்ந்த வார்த்தைகளை" நினைத்து பிரம்மித்து நின்றார். அதேநாளில் அந்த வழக்கும் துமாலுக்கு சாதகமாக தீர்ப்பு வர, அவரது கட்சிக்காரர் பெருந்தொகையை துமாலுக்கு பரிசளித்தார். அதன்பின்பு, வக்கீல் தொழிலில் துமாலின் புகழ் உச்சத்திற்கு சென்றது.
சாயியின் மீது நம்பிக்கை கொண்ட ஒருவனுக்கு எல்லா அற்புதங்களும் நிகழும் - 10.1.2019 பம்பாயைச் சேர்ந்த கடைக்காரரான சங்கர்லால் கெஷவ்ராம் பட், ஒரு கால் ஊனமானவர். இவர், சாய்பாபாவின் மாயமான தெய்வீக சக்தியைப் பற்றி கேள்விப்பட்டு 1911ல் ஷீரடிக்கு வந்து, சாஷ்டாங்க நமஸ்காரம் சமர்ப்பித்தார். அவரும் அருளாசி தந்தார். பிறகு, தோணித்துறைக்குப் போவதற்காக ஆற்றுநீரில் கொஞ்சம் இறங்கி சங்கர்லால் நடக்கும் போது, தொய்ந்து செயலிழந்திருந்த இவருடைய கால் நரம்புகள் அனைத்தும் புத்துணர்வு பெற்று சகஜமாகிவிட, இவரால் நிமிர்ந்து நெட்டைக்குத்தலாக நிற்க முடிந்தது. கால் ஊனமும் முழுமையாக குணமாகியது. நாற்பது வருடங்களுக்கும் மேலாக ஷீரடியில் ஓட்டலொன்று நடத்தி வந்த அதன் முதலாளி, அவருடைய மகள் வாதங்கண்டவள் என்றும் அதனால் அவளால் நடக்கவே முடியாது என்றும் சொல்லியிருக்கிறார். அவருடைய மகளை உடனே சாய்பாபாவின் சமாதிக்குக் கொண்டு போய் அங்கேயே படுக்க வைத்துள்ளனர். ஒருசில நிமிடங்களுக்குள்ளாகவே அந்தப் பெண் எழுந்து நடந்து கோயிலைச் சுற்றி வருவதை அனைவரும் பார்த்திருக்கிறார்கள். ஆச்சர்யத்தில் அறையப்பட்டிருந்த அவளுடைய பெற்றவர்களுக்கு, சாய்பாபா வந்து எழுந்து நடக்கச் சொன்னதாகவும் அவர் சொன்னபடியே செய்வதில் அப்போது தனக்கு எந்த சிரமமும் ஏற்படவில்லை என்றும் சொல்லியிருக்கிறாள் அச்சிறுமி. ஆக, சாயியின் மீது அளவுகடந்த நம்பிக்கை கொண்ட ஒருவனுக்கு வாழ்க்கையில் எல்லா அற்புதங்களும் நிகழும். || ஓம் சாய்ராம் ||
SaiBaba made eleven assurances to his devotees: Whosoever puts their feet on Shirdi soil, their sufferings will come to an end. The wretched and miserable will rise to joy and happiness as soon as they climb the steps of my Samadhi. I shall be ever active and vigorous even after leaving this earthly body. My tomb shall bless and speak to the needs of my devotees. I shall be active and vigorous even from my tomb. My mortal remains will speak from my tomb. I am ever living to help and guide all who come to me, who surrender to me and who seek refuge in me. If you look to me, I look to you. If you cast your burden on me, I shall surely bear it. If you seek my advice and help, it shall be given to you at once. There shall be no want in the house of my devotee. "Om Sri Sai Ram"
Please help me my son Any sloka to make my husband love me and come back to me Please please please help