1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Thirumanthiram

Discussion in 'Posts in Regional Languages' started by Littlerose, Aug 27, 2013.

  1. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    வருமாதி ஈரெட்டுள் வந்த தியானம் பொருவாத புந்தி புலன் போக மேவல்
    உருவாய சத்தி பரத்தியான முன்னுங்
    குருவார் சிவத்தியானம் யோகத்தின் கூறே" பாடல் - 598


    வருமாதி ஈரெட்டுள் வந்த தியானம் - ஆதி - இறைவன் ! சிவம். ஈரெட்டுள் - "எ" "உ" - இரு கண்களுக்குள் வந்த தியானம். இரு கண்வழி நாம் செய்யும் தியானத்தால் சிவத்தை அறியலாம்.



    புந்தி - கண் புடைத்து கொண்டிருப்பதால் அது புந்தி என்றானது. மனம் ஐம்புலன் வழி வெளியெ செல்லாமல் கண்ணில் வைத்து தியானம் செய்தால் உள்ளே ஆதியாகிய இறைவன் இருப்பதை காணலாம்.


    "புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே " - ஞானியின் கூற்றை சிந்திக்க. கண்ணில் வைத்த ஒளியாகிய திருவடியை போற்றுகின்றேனே என்கிறார்.


    கண்மணியில் அதன் ஒளியில் மனதை நிறுத்தி தியானம் செய்யச் செய்ய உருவாகும் சக்தியானது நம் முன்னால் தோன்றும். நம் முன் காட்சி கிடைக்கும்.


    சிவத்தை அடைய இதுவே முதல் அனுபவம். சக்தியை கண்டே அவள் அருள் கொண்டே சிவத்தை அடைய முடியும்.
     
  2. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    "ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளிதன்னை
    கண்ணாரப் பார்த்து கலந்தங் கிருந்திடில்
    விண்ணாறு வந்து வெளிகண் டிடவோடி
    பண்ணாமல் நின்றது பார்க்கலு மாமே" பாடல் - 600


    ஒப்பில்லாத ஒரே பார்வையுடன் இரு விழிகளில் நயனங்களில் உள்ள ஒளியே இறைவன். கண் இரண்டு. அனால் பார்வை ஒன்று. அதிசயம்.


    நாம் நமது கண்களால் உலகை காண்கிறோம். ஆனால் கண்ணை பார்க்க முடியவில்லை. இறைவன் நம் கண் ஒளியாக துலங்கி உலகத்தை நமக்கு காட்டுகிறார். ஆனால் தன்னை காட்டாமல் மறைந்திருக்கிறார்.


    இதை குறு உபதேசம் மூலமாக அறிந்து உணர்ந்து தவம் செய்யவும். நம் கண் மணி ஒளியை நாம் தவம் செய்து கண்டு மகிழ்ந்து அங்கேயே இருந்தால்!


    கண்மணி ஊசிமுனை துவாரத்தின் உள் சென்று அப்பாதையில் அவ்வெளியில் நிற்கையிலே


    விண்ணிலுள்ள ஆறு - நெருப்பாறு வந்து அந்த வெளிவழி பாய்ந்து வருவதை காணலாம். பேரானந்தம் கொள்ளலாம்.


    ஊசிமுனை துவார பாதையே மயிர்பாலம். அது வழியே நெருப்பாறு பாய்ந்து வரும். அக்கினி கலையில் இருந்து நெருப்பாறு ஒளி வெள்ளம் பாய்ந்து வரும்.


    அந்த ஒளி தண்ணொளி! விண்ணில் பிந்து வரும் சுடா நெருப்பு. சுகமான அக்கினி! குளிர்ச்சி பொருந்திய தீ! அதுவே சுயஞ் ஜோதி!!
     
  3. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    "எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும்
    கண்ணார் அமுதினைக் கண்டறி வாரில்லை
    உண்ணாடிக் குள்ளே ஒளியுற நோக்கினால்
    கண்ணாடி போலக் கலந்துநின் றானே" பாடல் - 603


    கண்ணில் ஒளியாய் அமுதாய் இருக்கும் மெய்பொருளை அறிந்து உணர்ந்து (குறு மூலமாக) தவம் செய்தால் முக்தி பெறலாம்.


    கண்மணி ஒளியில் மனதை நிறுத்தி உணர்வை பெருக்கி அதனால் ஒளி பெருகி கண்மணி ஊசிமுனை துவாரத்தின் உள் நாடிக்குள் ஊடுருவி சென்று அக்கினி கலையை அடையலாம்.


    கண்மணி ஒளியோடு ஒளியை பெருக்கியே உள்புக முடியும். புறப்பார்வையை விட்டு உள்ளே ஒளியோடு புக நோக்க ஆத்மஸ்தானத்திலெ நம் ஆத்ம ஜோதியை காணலாம்.


    கண்ணாடி போல எல்லாவற்றையும் காட்டுவதை இருக்கும் ஆத்ம ஜோதி. உள் நாடி இருக்க, உயிர் நாடி கண்ணடி போல காணும். கண்ணை நாடு. கண்ணிலே தான் கடவுள் ஆடிக்கொண்டிருக்கிறான்.


    கண்ணில் ஆடிக்கொண்டிருக்கும் ஜோதியை பார். அதுவே ஆதி! நம் கண்ணே கண்ணாடி. கண்ணை நாடி கருத்தை அதனுள் ஒளியில் வை. அந்த ஒளியை அறிந்து உணர சற்குருவை நாடு. காண்பாய் நீ உன்னையே . நீயே ஆத்மா.
     
  4. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    "நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்
    வாட்டம் இல்லை மனைக்கும் அழிவில்லை " பாடல் - 604


    நடுமூக்கு - இது பரிபாஷை. தண்ணீர் ஊற்றும் பாத்திரம் உண்டல்லவா? அதில் நீர் வரும் பகுதியை மூக்கு என்று தானே சொல்வோம்? நமக்கு கண்ணீர் வரும் கண். அதுவே நமக்கு மூக்கு. அதன் நடுபகுதியே ஊசிமுனை துவாரம் உள்ளதாகும். அதனுள் தான் ஊசிமுனை அளவு ஜோதி உள்ளது. அதாவது, இரு கண் நடுவிலே ஊசிமுனை துவாரத்திலே நம் நாட்டம், நினைவு நிலைத்திருக்க வேண்டும்.

    கண் மணி நடுவில் நாட்டம் வைக்க குறு அருள் இருந்தால் தானே முடியும். குரு தீட்சை பெற்றால் தானே முடியும். உணர்வு பெற்று கண்மணி ஒளியை பெருக்குவதே நாட்டத்தை வைப்பதால் ஏற்படும் பலன். ஒழி பெருக நமக்கு துன்பம் இல்லை. நம் மனையாகிய இந்த உடலுக்கும் அழிவில்லை.

    வினைகள் அகன்று சிரஞ்சீவிகளாக வாழலாம். தவறாக பொருள் கொண்டு மூக்கை பார்த்து மூச்சை அடக்கி மோசம் போனவர்கள் பலர்.
     
  5. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    "மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு" பாடல் - 620

    மனிதன் - பொருள் - மனம் படைத்தவன் - மனதை பண்படுத்த தெரிந்தவன்.


    மனதை பண்படுத்த ஒருநிலை படுத்த குரு தீட்சை பெற்று கண்மணியிலேயே லயித்து மனதை செம்மை படுத்தவும். வாயுவை பிடித்து வேண்டாத வேலை செய்ய வேண்டாம். குருவை பணிந்து சரண் அடைந்து மனிதன் ஆகலாம்.


    "நாட்டத்தை மீது நயனத் திருப்பார்க்குத்
    தோட்டத்து மாம்பழந்தூங்கலு மாமே " பாடல் - 624


    நாட்டம் - நமது எண்ணம். நமது கருத்து வேறு எங்கும் போகாமல் நயனம் - கண்ணில் இருத்த வேண்டும். இதுவே தவமாகும்.


    அங்ஙனம் இருந்தால் நம் உடலாகிய தோட்டத்தில் உள்ளே இருக்கும் மாம்பழம் ஞானப்பழம் நமக்கு தான்.
     
  6. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    "கனல் வழியே சென்று எல்லாஞ் சிருட்டித்த
    பேரொளிப் பொற்பினை நாடி" பாடல் -628


    கண்மணி கனல் வழியே சென்று எல்லாவற்றையும் படைத்த பேரொளி - பரமாத்மா - பரம்பொருள் - நாடி நலம் பெறலாம்.
     
  7. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    "தமரகத் தின்னொளி யறிந்து கொள்வார்க்கே" பாடல் -681


    ஒளி எங்கே என தெரிந்து கொள்ளுங்கள். குரு உபதேசமே - கண்மணி தீட்சை ஒன்றே அதற்கு ஒரே தீர்வு.


    தமர் - ஓட்டை


    நமது கண்மணி நடுவில் மத்தியில் ஊசி முனை அள்வு துவாரம் - ஓட்டை உள்ளது. இது தான் இடம்.


    கண்மணியே தமர் உள்ள இடம். அதன் உள்ளே தான் ஊசிமுனை அளவு நெல்வாலின் நுனியளவு ஒளி உள்ளது.
     
  8. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    "உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே" பாடல் - 724


    "உடம்பை வளர்ப்பது என்பது உடம்பினுள் ஒளி கண்டு ஒளியை பெருக்கி அதனால் உயிரும் நிலைப்பதேயாகும்". " அ" " உ" ஒளி உள்ளே பாய்வதே உபாயம்.

    "உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்" - பாடல் - 725

    பொருள் - உயிர் . கண்மணியான துறை அறிந்து கனல்வழிப்போனால் கண்நின்ற அவனை காணலாம்.
     
  9. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    "சுழற்றிக் கொடுக்கவே சுத்திக் கழியுங்
    கழற்றி மலத்தைக் கமலத்தைப் பூரித்து
    உழற்றிக் கொடுக்கும் உபாயம்" பாடல் - 726

    மிக மிக முக்கியமான பாடலில் ஒன்று.

    மெய்பொருள் - நம் கண்மணி - கருவிழியினுள்ளே அந்தரத்திலே நம் உடலை தொடாமல் இருக்கிறது. லேசாக சுற்றிக்கொண்டு இருக்கிறது.



    கண் கருவிழி உள்ளே கண்மணி ஊசிமுனை துவாரம் மத்தியில் கொண்டு உள்ளே ஊசிமுனையளவு ஒளியால் துலங்குகிறது.


    நாம் குரு உபதேசம் பெற்று தீட்சை பெற்று உணர்வை மணியில் நிறுத்த, உணர்வு பெருகி கண்மணி சற்று வேகமாக சுழல ஆரம்பிக்கும்.


    இதுவே நாம் செய்யும் தவத்தின் பொது நடப்பது. தவம் கூட கூட மணியும் வேகமாக சுழலும். அப்போது அதன் துவாரத்தை மறைத்து கொண்டிருக்கும் வட்டத்திரை - மெல்லிய சவ்வு - நம் மும்மலத்திரை கழன்று ஓடிவிடும்.


    எப்படி?


    மணியின் வேகம் கூடும் பொது உள் உள்ள ஊசிமுனையளவு நெருப்பு கொஞ்சம் கொஞ்சம்மாக பெரிதாகும். பெரு நெருப்பாகும். அந்த உஷ்ணம் தாளாமல் திரை - வினைதிரை உருகி கழன்று விடும். மறைந்துவிடும். இதுவே நமக்கு கிடைக்கும் பலன்.


    திருவடியாகிய நம் கண்மணி ஒளியை பெருக்குவதில் தான் இருக்கிறது. இந்த லீலா வினோதம்.


    இதுவே வினையற்று என்னை எனக்கு உணர்த்தும் உபாயமாகும்.
     
  10. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    "இம் முட்டை இரண்டையுங் கட்டிட்டு ஊன்றி இருக்க உடம்பழியாதே" பாடல் - 728


    முட்டை - கண். முட்டை போல் இருப்பதால் முட்டையிலே கரு இருப்பதைப் போல் கண்மணியே கருவிலே உருவான முதல் உறுப்பு. அதில் ஒளி இருக்கிறது. அதுவே கரு.


    இரு கண்ணான இரு முட்டையையும் புறத்தே பார்வை போகாமல் கட்டி அகத்தே செலுத்துவதாகும்.


    இரு கண்களையும் சூரிய சந்திர ஜோதிகளை இணைப்பதே கட்டுவதாகும்.


    இவ்வாறு இரு கண் ஒளியிலும் நினைவை நிறுத்தி உணர்ந்து உள்கொண்டு சேர்ந்தால் சிரஞ்சீவியாகலாம். இவ்வுடம்பு அழியாது.
     

Share This Page