1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Thamizh vazhakku

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Jan 16, 2016.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,368
    Likes Received:
    10,572
    Trophy Points:
    438
    Gender:
    Female
    தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட நாம் பல வழக்குகளை அறியவில்லை.தன் இச்சையாக சில சொற்ககளை கையாண்டு வருகிறோம்.அதன் மூலமோ பொருளோ விளங்காமலேயே பேசி வருகிறோம்.
    நான் சிறுமியாக இருந்தபோது நடந்த விஷயம்.எங்கள் ஊரில் கோவில் மதிலில் எப்போதும் குரங்குகள் இருக்கும். வீடுகளுக்குள்ளும் வந்து விடும்.
    எங்கள் பக்கத்துக்கு ஒரு மாமி புதியதாக
    குடி வந்தார்.குரங்கு பற்றிப் பேசும்போது
    மாமி " குரங்கு என்ன அட்டஹாசம் பண்ணுகிறது.பாவாடைக்குள் நுழைந்து விட்டது. அதை விரட்டப் பெரும் பாடு பட்டேன் " என்று சொன்னார்.
    எல்லோரும் பெரிதாக சிரித்தனர்( நானும் தான் )
    மாமியும்" அப்படி என்ன நான் தப்பாகப் பேசினேன் ,குட்டிகள் சிரிக்கற மாதிரி " என்று திட்டிக் கொண்டே உள்ளே போய் அழ ஆரம்பித்து விட்டார்.என் அம்மாவிடம் போய் சொன்னதும் அம்மா மாமியை சமாதானம் செய்ய அவர்கள் வீட்டுக்குள் போனார். நானும் உடன் இருந்தேன்.அம்மாவும் விவரத்தை கேட்டதும் தன் சிரிப்பை அடக்கிக்கொண்டு விசாரித்ததும் தான் எங்கள் அறியாமை தெரிய வந்தது.
    மாமியின் ஊரில் 'பரண்' என்பதைப் 'பாவடக்கு' என்று சொல்வார்களாம்.பரணில் குரங்கு புகுந்தது என்பதை மாமி ' பாவடக்குள்' என்ற வார்த்தைக்கு பதிலாகப் பேச்சு வழக்கில் 'பாவாடைக்குள் 'என்று சொல்லி விட்டார்.அதுதான் எங்கள் சிரிப்புக்குக் காரணம்.
    மாமியிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு வீடு திரும்பினோம்.மாமியும் நானும் சிறந்த தோழிகளாகிவிட்டோம்.
    அன்று தொடங்கிய அறியாமையின் வருத்தம் இன்னும் நீங்கவில்லை

    Jayasala 42
     
    Loading...

Share This Page