பள்ளிக் கூடத்திலிருந்து வந்தவுடன் ஆசையாக ஓடிவந்து 'பாட்டி' என்று கட்டிக் கொள்ளப் போன போது " இரு.. இரு.. இரு. மேல பட்டுடாதே.. போ.. போயி கைய கால அலம்பிண்டு யூனிஃபார்ம மாத்தி வேற டிரஸ் போட்டுண்டு வா.." என்று விரட்டி விட்ட பாட்டியப் பாத்து பயங்கரமா கோபம் வந்தது. பெரிய ஆசாரம்... பொல்லாத ஆசாரம். சாதம் போட்ட கையோடு நெய் கிண்ணத்தைத் தொட்டபோது "ஏண்டி இப்படி பத்து கையோட நெய் கிண்ணத்த தொடற? அந்தக் கிண்ணத்த தனியா வை" ன்னு பாட்டி சத்தம் போட்ட போது 'என்ன பெரிய பத்து எட்டு? அப்படினு எரிச்சலாதான் வந்தது. ☹☹ காலேஜ் ஃப்ரண்ட்ஸ் வீட்டுக்கு வந்து சாப்பிட்டார்கள். இடது கையால் தட்டைப் பிடித்துக் கொண்டு அப்பறம் அதே கையால தண்ணி டம்ளர எடுத்து குடிச்சதை கண் கொட்டாம பாத்துண்டே இருந்தா பாட்டி.. சாப்பிட்டு எழுந்துக்கற சமயத்துல ஃபிரண்ட கூப்பிட்டு 'தட்டோட டம்ளரயும் எடுத்துண்டு போய் அலம்பிடு.. எச்சல் தட்டை தொட்ட கையோட டம்ளரயும் தொட்டுட்ட" அப்படினு ஆர்டர் போட்ட பாட்டிய பாத்து ரொம்ப அவமானமா இருந்தது. அப்பறம் ஃப்ரண்ட்ஸ் கிட்ட பாட்டி அப்படி சொன்னதுக்காக எவ்வளவு தடவ 'சாரி' சொன்னேனு கணக்கே இல்லை.. நகத்தைக் கடிச்சுண்டே சுவாரசியமா டிவி பாக்கும் போது எதேச்சையா திரும்பி பாத்தா ஊஞ்சல்ல உக்காந்துண்டு பாட்டி என்னையே பாத்துண்டிருப்பாள். "போ.. போய் கை அலம்பிண்டு வா.. நாளைலேர்ந்து அந்த நகத்துல வேப்பெண்ணை தடவி விட்டாதான் சரியா வரும்" என்று மிரட்டும் பாட்டிய நம்மால ஒண்ணும் பண்ண முடியலயேன்னு செம கடுப்பா இருக்கும் ரெண்டாங்கட்டு மாடாப்பிறைல பசுஞ்சாணி உருட்டி வைத்திருப்பார்கள். கொஞ்சம் சாணிய கரைச்ச தண்ணியால சாப்பிட்ட எடத்த சுத்தம் பண்ணிட்டு அப்பறம் துணியால துடைக்கணும். காலங்கார்த்தால எல்லார் வீட்டு வாசல்லயும் சாணி கரைச்சு தண்ணி தெளிக்கற அம்மாவல்லாம் பாத்து பாவமா இருக்கும். பாட்டியெல்லாம் பாத்தா வில்லன் மாதிரி இருக்கும். .. இப்படி இத்தன நாளா என் கண்ணுக்கு வில்லனா, பழைய பஞ்சாங்கமா, சர்வாதிகாரியா தெரிஞ்ச என் பாட்டி இந்த கரோனா வைரஸ் வந்தவிட்டுதான் 'அவள் பெரிய ஸயின்டிஸ்ட்டு'ங்கற உண்மைய உலகத்துக்கே தெரிய வச்சிருக்கா.. உன்ன தப்பா நினைச்சதுக்காக ஸாரி பாட்டி!! jayasala42
பாட்டிகள் அந்தகால பாட்டிகள் உங்க என்னோட பாட்டிகள் உண்மையை உணர்ந்து செயலில் பயனை அப்பப்ப ஓயாமல் சொன்னது நன்றாக இருந்தது. நன்றி வணக்கம்.