அனுமனும்சீதாதேவியும்தமிழ்மொழியில்தான்பேசினராம்.சீதை வனத்தில்அகஸ்தியஆசிரமத்தில்தங்கினபோதுதமிழ்மொழியைப் பேசக்கற்றுக்கொண்டாளாம். அனுமன்தான்சொல்லின்செல்வன் ஆயிற்றே.எல்லாம்அறிந்தவன். லக்ஷ்மிசஹஸ்ரநாமத்தில் 'சஹஸ்ராஸ்யா' என்றதிருநாமத்துக்கு விளக்கம்கூறும்போது,'ஆயிரம்வாயைஉடையவள்என்பதற்கு பதில் ஆயிரம்மொழிதெரிந்தவள்என்றுஆன்றோர்விளக்கம்கூறியுள்ளனராம். ஒருமனிதன்மரத்தின்உச்சியில்இருக்கும்போதுகிளைமுறியும் தருவாயில்இருந்தது. கருணைவடிவானஇலக்குமிதேவிதிருமாலிடம்அவனைக்காப் பாற்ற வேண்டினாள். திருமால்சொன்னார்" அவன்இப்போதுஆபத்தான நிலையில்இருக்கிறான்.அவன் என்னைநினைத்து'அப்பா ' என்று கூப்பிட்டால்நான்காப்பாற்றுகி றேன்.'அம்மா' என்றுகூப்பிட்டால்நீ போய்க்காப்பாற்றுஎன்றுசொன்னாராம். அந்தமனிதன்இரண்டும்சொல்லாமல் 'ஐயோ' என்றுகத்தினான். திருமால் 'அவன்நம்இருவரையுமேநினைக்கவில்லை. கீழே விழுந்துஅடிபடுவதுதான்அவன் தலையெழுத்து.'என்றுசொன் னார். லக்ஷ்மிதேவிஅவன் 'ஐயோ' என்றுகூறியதை''ஐ' + ஓ 'என்றுபதம் பிரித்துப்பார்த்தாளாம். தமிழில் 'ஐ' என்றஓரெழுத்துச்சொல் 'தலைவன், அரசன்அல்லது மதிப்பிற்குரியபெரியோரைக்குறிக்கும். 'ஓதலைவனே' அரசனேஎன்றுதிருமாலைஅழைப்பதாகப்பொருள் கொண்டுஇலக்குமிஅவனைஓடிச்சென்றுகாப்பாற்றினாளாம். அன்னையின்கருணைஉள்ளம் அப்படிப்பட்டது.அவன்உண்மையாகவே 'ஐயோ' என்றேகூறியிருந்தாலும்அவன்இருக்கும்உண்மையான சிக்கலைஅறிந்துகொண்டு, மொழிச்சிக்கலின்துணைகொண்டு, பதம்பிரித்துப்பொருள்கொண்டு பக்தனைரக்ஷிப்பதில்வல்லவள்'. இதுதான் 'சஹஸ்ராஸ்யா' என்றதிருநாமத்துக்குஉபன்யாசகர் அளித்தவிளக்கம். இனிமேல்யாராவது'ஐயோ' என்றுகத்தினால்நாமும்அதை அமங்கலமாகக்கருதாமல்யாரோபெரியவரைஅழைப்பதாகக் கொள்ளலாமே. jayasala42
Enjoyed reading. Luckily it was not taken as English word in which case the interpretation would be “ I owe” . Thanks and Regards.