Must be nayanthara. She's the one who is dating a younger guy right? Unless Trisha can prove that she's dating an even younger guy
It is Nayanthara. இனிப்பு கடையின் பெயரை தனது பெயருக்கு பின்னால் வைத்திருக்கும் நடிகைக்கு தற்போது புதிய ஆசை துளிர்விட்டிருக்கிறதாம். அதாவது, நயன நடிகை சமீபத்தில் வெளிவந்த ஒரு படத்தில் அவரது சொந்த குரலில் பேசி நடித்திருந்தார். அந்த குரல் அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகைக்கும் பலத்த பாராட்டுக்கள் வந்தது. அதேபோல், இந்த நடிகைக்கும் தனது சொந்த குரலில் பேசி நடிக்க வேண்டும் என்று ஆசை வந்திருக்கிறதாம். தனது ஆசையை இயக்குனரிடம் சொல்ல, இயக்குனரோ முதலில் தமிழில் நன்றாக பேசிக் காட்டுங்கள். அப்புறம் குரல் நன்றாக இருந்தால் டப்பிங்க் வைத்துக் கொள்வோம் என்று சொல்லிவிட்டாராம். இதனால், தமிழை கற்றுக்கொள்ள ஆசிரியர் ஒருவரை நியமித்தி நடிகை தமிழ் கற்று வருகிறாராம். கூடிய விரைவில் கற்றுக் கொள்வார் என்று நடிகையின் நெருங்கிய வட்டாரங்களில் இருந்து கூறப்படுகிறது.
காதல் கணவருக்காக சொந்தப்படம் தயாரிக்க முடிவு செய்திருந்தார், புன்னகை நடிகை. பெரிய நடிகர்கள் நடித்த படங்களே கோடிக்கணக்கில் நஷ்டமாவதால், அந்த முயற்சியில் இருந்து பின்வாங்கி விட்டாராம். ‘மிகவும் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை, ஒரே படத்தில் இழந்து விடாதே’ என்று வேண்டியவர்கள் அட்வைஸ் பண்ணியதால், அந்த முயற்சியைக் கைவிட்டு விட்டதாக சொல்கிறார்கள்.
அந்த யோகா நடிகை, நடிக்க வந்த புதிதில் பார்ட்டியே கதி என்று இருப்பாராம். பிறகு தமிழ், தெலுங்கில் பிசியானதும் பார்ட்டியை குறைத்து வேலையில் கவனம் செலுத்தினார். இடையில் கொஞ்ச காலம் ஆன்மிகத்தை நாடியிருந்தவர், இப்போது மீண்டும் பார்ட்டியில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டாராம். அவருடைய பழைய தோழிகளுடன் பெங்களூர், ஐதராபாத் நட்சத்திர ஓட்டல்களில் அவரை காண முடிவதாகச் சொல்கிறார்கள்.
பழனியை பூர்வீகமாக கொண்டவர் பிரபல ஜோதிடர் அசோக்ஜி. தியான வித்தைகளில் ஸ்பெஷலிஸ்ட். ஆருடம் சொல்வதில் கில்லி இவர். கடந்த சட்ட மன்ற தேர்தலில் அதிமுக ஜெயிக்கும் என்று சொன்னார். அதிமுக ஜெயித்தது. அதே போல ஜெயலலிதா சிறையிலிருந்து வெளியில் வருவார் என்றும் சொன்னார். அது நடந்தது. அதுபோலவே சென்னையில் வெள்ளம் வரும். எல்லாரும் தப்பித்து வெளியேறுங்கள் என்று வெள்ளம் வருவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பே எச்சரித்தார். அதற்கப்புறம் அதுதான் நடந்தது. அவர் தற்போது ஜெயலலிதா ஆவி சாந்தி அடையவில்லை. கடைசி காலத்தில் தன்னை கேவலப்படுத்தியவர்களை பழிவாங்கும் என்று கூறி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். அவர் கூறியிருப்பதாவது- இந்து மத தர்மப்படி எந்த ஒரு ஆத்மாவும் 3 நாள் கழித்துதான் கர்மாவை சேரும் என்பது விதி. ஜெயலலிதாவின் ஆன்மா திருப்தியற்ற நிலையில் இருப்பதால் அவரது உடலை விட்டு இன்னும் முழுமையாக வெளியேறவில்லை. பொதுவாக இறந்த பிறகு பிரேத தோஷம், பிரேத சாபம் என்று ஒன்று உண்டு. மூன்று நாட்கள் வரை இறந்த உடலை கேவலப்படுத்தினாலோ அல்லது அவமானம் செய்தாலோ அதற்கு நிச்சயம் சாபம் உண்டு. அது மாதிரியான சாபத்திற்கு நிச்சயம் நிறைய பேர் ஆளாகி இருக்கிறார்கள். ஜெ. உடலுக்குள் உயிர் இருந்த காலக்கட்டத்தில் அவரிடம் உண்மை இல்லாமல் இருந்தவர்களுக்கு நிச்சயம் தண்டனை உண்டு. இந்து மத ஆகம விதிப்படி ஜெயலலிதாவின் குடும்பத்தில் சடங்குகள் செய்யா மல் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் அவரது ஆவி அதிதீவிர ஆத்திரத்தோடு இருக்கிறது. ஜெயலலிதா விரும்பிய வீடு, ஆசைப்பட்டு அணிந்த ஆடைகள், பொருட்கள் இவைகளை யார் எடுத்து கொண்டாலும், பயன்படுத்தினாலும் அது அபகரிப்பாகும். அப்படி செய்பவர்களுக்கு நிச்சயம் ஜெயலலிதா சரியான பாடத்தை, தண்டனையை வழங்குவார். அதுபோலவே ஜெயலலிதா ஆவி பூலோகத்தில் 2023 வரை நிச்சயம் இருக்கும். ஜெயலலிதா ஆவி அடுத்த பிறவி எடுக்க இன்னும் 6 வருஷம் ஆகும் என கூறி உள்ளார். நம்பலாமா, வேண்டாமா?
வளசையார்… (வளசரவாக்கத்துல கெத்து காட்றவராம்) புரசையார்… (புரசைவாக்கத்துல கெத்து காட்றவராம்) இப்படி வட்டச் செயலாளர்களான வண்டு முருகன்கள் விதவிதமான பட்டப்பெயர்களோடு திரியும் நாட்டில், சினிமாக்காரர்களுக்கு மட்டும் இந்த மாதிரி ‘பட்டங்கள்’ விஷயத்தில் படு தட்டுப்பாடு! இன்னொரு ஹீரோவின் பட்டப் பெயரை பறித்துக் கொள்வதால் சம்பந்தப்பட்ட நடிகர்களின் ரசிகர்கள் வெந்நீர் பானையில் விழுந்த மாதிரியே எபெக்ட் கொடுக்கிறார்கள். போன வாரம் கூட ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தில் ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ என்று பட்டம் போட்டுக் கொண்ட லாரன்சை விட்டு விளாசியது சோஷியல் மீடியா! இவரும் பயந்து போய், படத்தின் டைட்டில் கார்டிலிருந்தே அந்த பட்டத்தை நீக்கியதுடன், ரஜினியை நேரில் சந்தித்து மன்னிப்பும் கேட்டார். இது லாரன்சின் பக்குவத்தைதான் காட்டுகிறது. நல்ல விஷயம். ஆனால் இதே சினிமா ரசிகர்கள் இன்னும் கொஞ்ச நாளில் திரைக்கு வரப்போகும் நயன்தாராவின் டோரா திரைக்கு வந்தால் என்ன பண்ணப் போகிறார்களோ? ஏன்? அந்தப்படத்தில் நயன்தாராவுக்கு ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டம் கொடுக்கப்பட்டுள்ளதாம். இது நயன்தாராவுக்கு தெரியுமா? தெரிந்தால் அனுமதிப்பாரா? அல்லது தெரிந்தும் தெரியாதது போல இருந்தாரே… லாரன்ஸ். அவர் ஸ்டைலில் அமைதி காப்பாரா? இப்படி ஆயிரம் கேள்விகள் எழுந்துள்ளன. லாரன்ஸ் விஷயத்தில் கோபப்பட்ட ரசிகர்கள், நயன்தாராவை என்ன பண்ணப் போகிறார்களோ?
அலிபாபா குகைக்குள் ஐஸ் விற்கப் போனால், குச்சி எது? கோன் எது? என்று குழம்பி போட்டதை போட்டுவிட்டு ஓட வேண்டியதுதான்! சினிமாக்காரர்களின் காதல்கள் பல இப்படிதான். உள்ளே போகும் வரைக்கும் தெரியாது. இது ஆளையே குளோஸ் பண்ணும் அலிபாபா குகை என்று? நயன்தாரா சிக்கிக் கொண்டு வெளியே வந்து வருஷங்கள் ஆவதற்குள், அடுத்த நயன்தாராவாக சிக்கிக் கொண்டிருக்கிறார் தமன்னா. பிரபல டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவாவுக்கும் நயன்தாராவுக்குமான லவ், ஊரே வியந்த ஒண்டிப்புலி கதை! மாஸ்டரின் முதல் மனைவிக்கும், நயன்தாராவுக்கும் நேரடி சண்டையே வந்தது. படப்பிடிப்புக்கு நேரில் வந்து முடியை பிடித்து இழுக்கவும் கூட திட்டமிட்டார் மாஸ்டரின் மனைவி. அதற்கப்புறம் கால மாற்றத்தில் எல்லாம் நீர்த்துப் போனது. திருமணம் வரைக்கும் போன காதலை, திரும்பவும் கண்ணீரில் கரைத்து விட்டு கரையேறினார் நயன்தாரா. இந்த களேபரங்களில் நயன்தாரா பாடுபட்டு சேர்த்த பணம் பதினைந்து கோடி அவுட்டானதுதான் மிச்சம்! இன்னொரு மிச்சம்… நயன்தாராவின் கையில் பச்சைக்குத்திய P என்ற இனிஷியல்! இப்போது மாஸ்டரின் முழு கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டாராம் தமன்னா. தேவி படத்தில் துவங்கிய நட்பு மெல்ல காதலாக மாறியதாகவும் கூறுகிறது கோடம்பாக்கம். காதலின் அடுத்த கட்டம் என்னவோ? அதுவும் நடந்து, படப்பிடிப்பில் வாந்தியாக எடுத்துக் கொண்டிருந்தாராம் தமன்னா. இதனால் படப்பிடிப்புகள் சில நாட்கள் தடைபட, விஷயம் வர்தா புயல் வேகத்தில் வீசிக் கொண்டிருக்கிறது கோடம்பாக்கத்தில். இதை நிரூபிப்பதை போல, தனது அடுத்தடுத்த படங்களில் ஹீரோயினாக தமன்னாவையே புக் பண்ணச் சொல்லி தயாரிப்பாளர்களை வற்புறுத்த ஆரம்பித்திருக்கிறார் பிரபுதேவா. இதுதான் சந்தர்ப்பம் என்று தனது சம்பளத்தை முந்தைய சம்பளத்தை விட சில மடங்கு உயர்த்திவிட்டாராம் தமன்னா. மாஸ்டர் வேணும்னா தமன்னாவும் வேண்டுமல்லவா? அதனாலேயே இவர் கேட்கும் சம்பளத்தை கொடுத்து அழ தயாராகிவிட்டார்கள் தயாரிப்பாளர்கள். இந்த விஷயத்தையெல்லாம் கேள்விப்பட்ட நயன்தாரா சொன்ன ஒரு வார்த்தைதான் இந்த நியூசின் தலைப்பு. “தேவையா இது?”