பிரேமம் படத்தில் நடித்து பாப்புலரான நடிகை. சினிமா வாய்ப்புகள் தேடி வந்தபோது டாக்டர் படிப்பு படிக்கப் போனவர், இப்போது திரும்ப வந்து ஒரு தமிழ் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஏகப்பட்ட கண்டிஷன்கள் போட்ட நடிகையை 'உன்னை அந்த வாரிசு நடிகை அளவுக்கு ஆக்கிக் கடடுறேன்' என்று ஹீரோவே ஆசை காட்டி நடிக்க ஓகே சொல்ல வைத்தார். காரணம் ஹீரோவுடன் நடிக்க வயதைக் காரணம் காட்டி அந்த வாரிசு நடிகை மறுத்தது தான்.படப்பிடிப்புக்கு வரும் நடிகை கையில் மொபைலே கிடையாதாம். பெர்சனல் நம்பர் கேட்பவர்களிடம் 'நான் மொபைல் யூஸ் பண்றதில்லை. எதுவாயிருந்தாலும் அம்மாவுக்கே பேசுங்க...' என்று சொல்லி விடுகிறாராம். ஆன் ஸ்க்ரீன் கெமிஸ்ட்ரியை ஆஃப் ஸ்க்ரீனிலும் கண்டினியூ பண்ண நினைக்கும் ஆட்களுக்காக இப்படி ஒரு ஐடியாவாம்! இவங்க பொழைக்க தெரிஞ்ச பொண்ணா? பொழைக்க தெரியாத பொண்ணா? - இது இன்டஸ்ட்ரியில் நிலவும் பேச்சு.
துரையம்மா நடிகை வைக்கும் செலவை பார்த்து தயாரிப்பாளர்களுக்கு கண்ணீர் வருகிறதாம். துரையம்மா நடிகை கோலிவுட், பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். கோலிவுட்டில் பிரமாண்ட இயக்குனரின் இரண்டு படங்களில் நடித்துவிட்டார். அதுவும் உச்ச நடிகர் படத்தில் நடித்து பெரிய பெயர் எடுத்துவிட்டார். அம்மணி படப்பிடிப்பு நடக்கும்போதே திடீர் என்று தனது நாட்டிற்கு பறந்துவிடுவாராம். படப்பிடிப்பு முடிவதற்குள் பல முறை தமிழகத்தில் இருந்து தனது நாட்டிற்கு பறந்துவிடுவாராம். அவரது விமான செலவை தயாரிப்பாளர் தான் ஏற்க வேண்டுமாம். துரையம்மாவுக்கு மட்டும் ஆகும் செலவே பெரும் செலவாக உள்ளதாம். துரையம்மாவுக்காக தயாரிப்பாளர்கள் பணத்தை தண்ணீராக செலவு செய்ய வேண்டியுள்ளதாம். இதனால் பெரிய தயாரிப்பாளர்களால் மட்டும் தான் துரையம்மாவுக்கு செலவு செய்ய முடியம் என்று கூறப்படுகிறது.
என்னதான் இளமையான வேடங்களில் நடித்தாலும் மனதை இளமையாக வைத்திருந்தாலும், ஒரு இளையவரைக் காதலித்தாலும் வயதை முகம் காட்டிக்கொடுத்து விடுமே... அப்படி ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டு முழிக்கிறாராம் சர்ச்சை நாயகி. வரிசையாக படங்களில் நடிப்பவர் பெரும்பாலும் இளமையான ரோல் என்றால்தான் ஒப்புக்கொள்கிறார். ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்களில் நடிகையின் உண்மையான வயதை கேமரா காட்டிக்கொடுத்து விடுகிறது.எனவே க்ளோஸ் அப் ஷாட்களை ஓப்பனாக எடுக்காமல் அரங்குக்குள்ளேயே எடுக்கச் சொல்கிறாராம். டபுள் செலவாகிறது எனப் புலம்புகின்றனர்
உலக நாயகனின் பெரிய மகள் பாடகியாகவும் இசையமைப்பாளராகவும் தான் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடி போடும் அளவுக்கு உயர்ந்தார். இயக்குநராகும் திட்டத்தில் இருந்த அவரது தங்கை நடிக்க வந்த பிறகு அக்காவுக்கு வாய்ப்புகள் குறைந்துவிட்டன. அப்பாவுடன் ஒரு படத்திலும் தெலுங்கில் ஒரு படம் இரண்டு படங்கள் தவிர வேறு படங்கள் கையில் இல்லை. எனவே நடிப்பில் இருந்து ஒதுங்கி இயக்குநராக ஆசைப்படுகிறாராம். இதற்காக ஸ்க்ரிப்ட் எழுதி வருகிறாராம். விரைவில் இயக்குநர் ஆகும் அறிவிப்பு வரலாம். தான் இயக்கும் படத்தில் நடிக்க மாட்டாராம்!
ஜெயமான நடிகருடன் ஹேண்ட்ஸம் வில்லன் இரண்டு படங்களில் இணைந்து நடித்தார்.இரண்டு படங்களுமே நன்றாகப் போனதோடு வில்லனின் நடிப்பு பெரிதாகப் பேசப்பட்டது. இதில் இரண்டாவது படத்தில் தனக்கு புரமோஷன்களில் முக்கியத்துவம் குறைந்ததால் தானே சொந்த செலவில் புரமோஷன் செய்துகொண்டார் ஹேண்ட்ஸம். அதில் ஹீரோ பெயரே வராமலும் பார்த்துக் கொண்டார். இது ஹீரோவைக் கடுப்பேற்றியுள்ளதாம். கதை சொல்ல வரும் உதவி இயக்குநர்கள் நீங்களும் அவரும் என்று சொல்ல ஆரம்பித்தாலே கதை கேட்பதை நிறுத்திவிட்டு ரிட்டர்ன் அனுப்பிவிடுகிறாராம் ஹீரோ!
ஒல்லி நடிகரை வைத்து அடுத்த படம் இயக்கப்போவதாக குறும்படத்தில் இருந்து பெரிய படம் இயக்க வந்த இயக்குநர் அறிவித்தார். அது ட்ராப் ஆகிவிட்டதாம். இயக்குநர் இயக்கி கடைசியாக வெளிவந்த படம் சரியாக போகவில்லை. இதனால் இயக்குநர் கேட்ட பட்ஜெட்டை போட்டுப் படமெடுக்க யோசிக்கிறாராம் ஒல்லி நடிகர். அமெரிக்காவில் நடக்கும் கதை என்பதால் பட்ஜெட் 50 சியைத் தாண்டுகிறதாம்.வெளியில் தயாரிப்பாளர் கிடைப்பது சிரமம் என்றுதான் தானே தயாரிப்பதாக வாக்கு தந்திருந்தார் நடிகர். இப்போது நடிகர் கைவிரித்து விட்டதால் என்ன செய்வதென்று தெரியாமல் நிற்கிறாராம் இயக்குநர். ஒல்லியால் பாதிக்கப்பட்ட இயக்குநர்கள் தனி சங்கமே ஆரம்பித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
சென்னை: தனது முன்னாள் கணவருக்கு திருமணம் என்ற செய்தியை கேள்விப்பட்ட இளம் நடிகை கதறி அழுதாராம். பிரபல நடிகை ஒருவர் இயக்குனரை காதலித்து திருமணம் செய்தார். பின்னர் ஒத்து வரவில்லை என்று கூறி விவாகரத்து பெற்றார். விவாகரத்திற்கு பிறகு அவர் ரொம்பவே ஜாலியாக இருப்பதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கிறார்கள்.இந்நிலையில் இயக்குனருக்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடக்கிறதாம். இது குறித்து படப்பிடிப்பில் இருந்தபோது தான் நடிகைக்கு தெரிய வந்துள்ளது. தனது முன்னாள் கணவருக்கு திருமணம் என்ற செய்தியை கேட்டதும் அம்மணி கேரவனுக்குள் ஓடிவிட்டாராம். கேரவனுக்குள் அவர் கதறிக் கதறி அழுதாராம். அவர் அழும் சப்தம் கேட்டு படக்குழுவினர் விஷயம் தெரியாமல் குழம்பியிருக்கிறார்கள். கேரவனில் இருந்து வெளியே வந்த நடிகையின் கண்களும், முகமும் வீங்கிப் போயிருந்ததாம். அழுது முடித்தவுடன் பேக்கப் செய்துவிட்டு கிளம்பிவிட்டாராம்.
சமர்த்தான காத்தாடி நடிகைக்கு தெலுங்கு பெரிய ஹீரோ குடும்பத்தில் மருமகளாகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நிச்சயம் முடிந்த நிலையில் திருமணத்துக்கு காத்திருக்கிறார். நடிகைக்கும் பல்லாவரத்தில் இருக்கும் அவரது பெற்றோருக்கும் வெகு நாட்களாகவே டெர்ம்ஸ் சரியில்லையாம். எனவே நிச்சயத்தில் அவர்கள் பங்குபெறவே இல்லை என்கிறார்கள்.தனக்கிருக்கும் இரண்டு குடும்பங்களையுமே ஒன்றாய் பார்த்துக்கொள்ளும் மாமனார், இந்த விஷயத்தில் வருங்கால மருமகளை அழைத்து அட்வைஸ் செய்திருக்கிறார். திருமணத்துக்கு அவசியம் பெற்றோர் வரவேண்டும்... அது உன் பொறுப்பு என்பது மாமனாரின் ஸ்ட்ரிக்ட் அட்வைஸ். ஏற்கனவே முதலில் நடக்க வேண்டிய கொழுந்தனார் திருமணம் நின்றுவிட்டது. எனவே பதற்றத்தில் இருக்கிறாராம் நடிகை.
nalladha pochchu ponga...duraiammavukku nadikka varam nu eppo dhan therinjukitten...... chumma konjam vellai tholiya potukuttu erukardhunala andha ammava edukkaranga moviesla nu ninaikkiren!
மும்பையில் இருந்து வந்த ‘கொழுக் மொழுக்’ நடிகை அவர். நடிக்கத் தெரியாவிட்டாலும், வெள்ளைத்தோலைக் காட்டியே தமிழ், தெலுங்கில் பவனி வந்தார். ஆனால், உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா? தயவுசெஞ்சு க்ளோசப் வைக்காதீங்க என்று சினிமாக்காரர்களே கெஞ்சும் அளவுக்கு அவரின் பர்பாமென்ஸ் படு பயங்கரமாக இருக்கும். சாயம் போன புடவை போல சீண்டுவார் இல்லாமல், அதாவது கையில் ஒரு படம் கூட இல்லாமல் இருக்கிறார் நடிகை. தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் குப்பை கொட்டியாகிவிட்டது. அந்தப் பெயரை வைத்து மலையாளத்தில் ஒரு ரவுண்டு வரலாம் என நினைக்கிறார். அவர் நினைத்தபடியே மலையாள சூப்பர் ஸ்டார் நடிக்கும் படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், அங்கு பர்பாமென்ஸ் முக்கியமில்லையா? அதுதான் நடிகைக்கு வராதே… அதனால், ஒரு படத்திலேயே அங்கும் துரத்தி அடிக்கப்படுவார் என்கிறார்கள்.