அந்நியனாய் வந்த என்னை அன்புக்கரங்களால் அணைத்திடவே!!! ஆசையாய் இருகிறதே - இந்த பாச மழைதனில் நனைந்திடவே!!! உள்ளம் வேண்டுகிறதே - என்றும் இக்குடும்பத்தில் இருந்திடவே!!! ஜென்மம் போதாது - இந்த கடனை அடைத்திடவே!!! என்னையும் ஏற்று ஊக்கம் தந்து... என் வரிகளுக்கு உயிர் தந்து... ஏக்கம் தனித்த அனைவருக்கும்... நன்றிகள் பல கூறுகின்றேன்!! BowBowBow
இக்குடும்பம் என்றும் இனியது வேண்டுவோருக்கு வேண்டியதையும் வருவோருக்கு என்றும் அன்பையும், நட்பையும் தாராளமாய், ஏராளமாய் தரும் குடும்பம். இதில் என்னைப்போல, நீங்களும் ஒரு அங்கம் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அன்னியோன்யமாய் இருக்கும் நமக்குள் நன்றி எதற்கு ...தவிர்ப்போமே
என்றென்றும் அன்புடன் மலர் நீங்கள் இருக்க என்றும் உங்கள் வரிகளில் மொய்க்கும் வண்டாய் நாங்கள் இருக்க, நம்மை இணைக்கும் இந்த தளம் ஒரு நந்தவனம் தான். நன்றி சொல்லி அன்னியப்படுத்தாதீர் தோழி அனைவரும் ஒன்றாய்.. இருப்போம் நன்றாய்..
இன்று நீங்கள் அந்நியன் என்றால் நேற்று நான் அந்நியன்.இங்கு வந்த பின் நாம் அனைவரும் ஒன்று தான்.நன்றி என்று சொல்லி நீங்கள் எங்களை அன்னியனாக்கி விடாதீர்கள் மலர்.
மனதில் தோன்றியதை... மறைக்க மனமின்றி... கூறிவிட்டேன்... இனி நம்மை பிரிக்காதவாறு என் வரிகள் இருக்கப் பார்த்துகொள்வேன்!!!