I thought my next post should be on the "fitness" saga (part3) but really couldnt find time. But this is a quick poem that I tried during my break time on canteen tissue paper after the morning's drive to office. Please do post your FBs. Thanks for being patient. பேருந்து பயணம் ஜன்னலோர இருக்கை கிடைக்கும் வரை நன்றாக தான் இருக்கும். ஆள்ளில்லாத பேருந்தில் இடம் கிடைப்பது கடினமா என்ன? வெளியே எட்டி பார்த்தவாறு வந்த போது ஒரு சிறிய பொருள் ஒன்றை பல வண்டிகள் பந்தாடியபடி இருந்தது. உற்று கவனித்தால், அது ஒரு சிறு குழந்தையின் செருப்பு ஒரு கால் செருப்பை தொலைத்த செய்தி அந்த குழந்தைக்கு தெரியமா? எப்படி உழைத்து காசு சேர்த்து செருப்பு வாங்கி தந்தார்களோ பெற்றோர். ஒரு கால் தொலைத்தது பெரிய இழப்பா அவர்களுக்கு? அந்த குழந்தை என்னவெல்லாம் திட்டு வாங்கியதோ... அடுத்த செருப்பு அதற்க்கு எப்போது கிடைக்குமோ... அது வரை 'நடக்க மாட்டேன்' என்று அழுது அம்மாவின் இடுப்பில் தஞ்சம் புகுமா? அல்லது இந்த கடும் வெய்யிலில் தார் ரோட்டில் அழ அழ இழுத்து செல்லப் படுமா? இன்னும் சில மாதங்களில் இந்த செருப்பு அதற்க்கு சேராது என்று தெரிந்தும் செருப்பு வாங்கி தந்திருக்கிறார்கள் என்றல், அது அழகுக்கா அல்லது அவசியத்துக்கா? எது எப்படியோ... பல்வேறு வண்டியின் சக்கரத்தில் மாட்டி பந்தாடியபடி இருக்கும் அந்த செருப்பை சிறிது நேரமே பார்த்தாலும் மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது... என்னவோ அந்த குழந்தையையே பந்தாடி விட்டது போல மனம் பதைக்கிறது!
Very true Tuffyshri. Nicely written. I can visualize it as though it is happening right before my eyes! And yes. I too feel too! -rgs
Hai TS, A very good poem. If we happened to see any children articles in a damaged manner we will have a feeling always that nothing should not happen to the child. Child is GOD and the child will not lie and carry things in a sweet way always.