: Dr.Dhavapalani Alagappan, Head of Apollo Emergency Dept. In the thick of Corona has penned this. So apt and genuine. அண்டசராசரம் எனதெனவே அகந்தையுடன் அலைந்த மானுடனை அகத்தை விட்டு அகலா நிலைக்குத் தள்ளினாய்! விண்வெளியில் விடுப்புக்கு செல்வேன் என்றவனை அடுப்படிக்குள் முடக்கினாய்! கூட்டமும் கேளிக்கையும் என்றிருந்தவனின் ஆட்டத்தை அடியோடு நிறுத்தினாய்! காடென்ன மலையென்ன கடலென்ன யாவும் எனதென்று இறுமாந்திருந்தவனை கடைப்பயணத்தின் போதும் சீண்டுவார் யாருமிலை! கிரீடம் வைத்தவனும் கீரைக்கட்டு விற்றவனும் ஒன்றெனவே பாகுபாடில்லாமல் பதைக்க வைத்தாய்! நாடாளுவோனையும் நன்கறிந்த சான்றோனயும் நகைப்புக்குள்ளாக்கினாய்! இது முறிக்கும் அது மடிக்கும் என்று ஏகத்துக்கு பிதற்றுகின்றனர் நிலையறியா மருத்துவர்! கூத்து கட்டும் நாயகனும் முகம் காட்ட முடியாமல் ஒளிகின்றான்! ஆனால் காணொளியின் நிரந்தர கதாநாயகன் ஆனாய் நீ! இங்கு பறந்தேன் அங்கு மிதந்தேன் என்றவனெல்லாம் இருந்த இடம் தெரியாமல் பதுங்கினான்! அழிப்பதோடு ஆக்கவும் செய்திருந்தால் சிலை வைத்திருப்பர் உனக்கு! பெருமளவில் மூச்சுமுட்டி பிணமாகும் கொடூரம் பரவலானது பாரெங்குமின்று! கொன்று குவிக்கும் கொள்ளைநோயே அழித்தது போதும் வேறோர் அண்டம் நோக்கிப் போ-சுவாசிக்கிறோம் நாங்கள்! jayasala42
கொன்று குவிக்கும் கொள்ளைநோயே அழித்தது போதும் வேறோர் அண்டம் நோக்கிப் போ-சுவாசிக்கிறோம் நாங்கள்! Sure, this is the prayer on everyones lips. Very well written. Thanks for sharing
@jayasala42 இதயத்தை பிழிந்தது கவிதையில் இயற்க்கையின் கோர தாண்டவம் தாவபளனி அளகப்பன் மருத்துவர் முறையாக முறையிடுகிறார் கோவிட்19 இடமே செவி சாய்ப்பான விரைவில் வைரஸ் பேரரசன்? நன்றி பெரிய சகோதரி பகிர்ந்தமைக்கு. அன்புடன் தியாகராஜன்