தீமைஅழிந்து நன்மை பிறந்தது அசுரன் அழிந்தான் தீபாவளி வந்தது புத்தாடை அணிந்தோம் பல்வகை உணவு உண்டோம் மத்தாப்பு கொளுத்தினோம் தரை சக்கரம் விட்டோம் உறவுகளுடன் கூடி கொஞ்சினோம் அன்று இன்று கண்ணாடி பெட்டி முன் அமர்ந்து பிறர் வெடிக்கும் வெடிகள் கண்டு ரசிக்கிறோம் அபத்தமான விவாதங்கள் பார்த்து கண்ணில் நீர் வர சிரிக்கிறோம் துயர் தரும் அரக்கர்கள் ஒழிந்தாலும் நம் உள்ளம் மாசு படுத்தும் செயல்கள் ஒழியவில்லையே காமம் குரோதம் பேராசை கோபம் எனும் பிற பல அசுரர்களை அழிக்க இன்னொரு அவதாரம் எடுப்பாயா கிருஷ்ணா
அருமையான கருத்துடைய கவிதை, பெரியம்மா ! கண்ணன் வருவான் , கவலை வேண்டாம் ! உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ! உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்/நமஸ்காரங்கள் !
நல்ல கருத்துள்ள கவிதை பெரியம்மா ! அனைவர் இல்லங்களுக்கு சென்று பலகாரங்கள் பரிமாறி உறவுகளுடன் ஒன்றுகூடிய காலம் நினைவுக்கு வருகிறது. தீபாவளி வாழத்துக்கள்.