தினமும் ஒரு முறையாவது இவ்விடம் வந்து, ஏதேனும் தோன்றுவதை உடன் பதித்து விட்டு, அரிதாக, பிறர் படைப்பையும் படித்து மகிழ்ந்து, செல்வது என் வாடிக்கை நிகழ்ச்சியில் ஒன்று. சில சமயம் எழுதுவது நன்கு அமைவதுண்டு. அதை எழுதியது நான் தானா என வியப்பதுண்டு. சில சமயம், எதுவும் தோன்றாமல் சென்று, முட்டிக் கொள்வோமா என்றும் தோன்றுவதுண்டு நீ எழுதுவது எப்படி இருந்தாலும் சரியே! படிக்க நாங்கள் உண்டு என ஊக்கம் தந்து, அவ்வப்போது பின்னூட்டமும் முறையே, தந்து விடும் நண்பர் பலர் இங்கே உண்டு. சில சமயம் பின்னூட்டம் எதுவும் வராது, ஏன்? என்று தயங்கியே நிறுத்தி விடாது, எழுதிடுவேன் வழக்கம் போல் நான் தவறாது. என்றேனும் பதில்கள் வராமல் போகாது. என்றாவது ஒரு அலுப்பும் வருவதுண்டு தான். எழுதுவதை நிறுத்திடலாம் என்றும் படும் தான். உள்ளிருக்கும் ஆர்வத்தால் தூண்டப் பட்டு நான் தொடர்கின்றேன், பாவம் நீங்கள் அனைவரும் தான்! -ஸ்ரீ
RGS, பிறர் படைப்பை படித்து மகிழ்வதுடன் நிறுத்திக் கொள்ளாமல், பிடித்திருந்தால் (முடிந்தவரை) பின்னூட்டமிட்டு அவர்களை ஊக்கப்படுத்துங்கள். :cheers நீங்களே வியந்தா எங்க நெலைமை என்னன்னு கொஞ்சம் யோசிங்க. ஹே...நாங்க எப்போ நீங்க எப்படி எழுதினாலும் சரின்னு சொன்னோம். நாங்க லேட்டா வந்தாலும் latest-ஆ வருவோம். வம்பு பண்ணுவோம் இப்பவாவது நாங்க படும்பாடு உங்களுக்கு புரிந்ததே.ரொம்ப நன்றிங்க:bowdown
ஸ்ரீ நானும் உங்களை போல நினைப்பேன்.ஆனாலும் மனதில் தோன்றியதை உடனே எழுதி விடுவேன்.பின்னூட்டம் வரவில்லை என்றாலும் நிறைய பேர் பார்க்கிறார்கள் என்ற திருப்தி ஏற்படும்.அதனால் எழுதிகொண்டே இருங்கள்.
Point taken Abhising. I do give feedback too, to any post that moves me a bit (a bit overweight I am, you see!). Will give more feedbacks. Thanks for yours. -rgs
அழகான வரிகளில் உங்கள் நடைமுறையினை கூறிய விதம் அருமை ஸ்ரீனி. எழுதுங்க எழுதுங்க நிறைய எழுதுங்க..உங்கள் மூலம் பலவற்றை அறிகிறேன் நான்
Thanks for your assurance and feedback Jaya. Just the right one required to keep writing, you know? -rgs