ஏன் வருந்துகிறாய் கண்ணே நீ? அது எனைக் கலங்கச் செய்கிறது. எதற்கும் கலங்காதெப்போதும் நீ இருந்திடவே உள்ளம் விழைகிறது. நேற்றைக்கு பூவாய் இருந்ததெல்லாம் இன்றைக்கு சருகே என அறிவாய்! நாளைக்கும் இருப்போம் என்பதெல்லாம் ஒரு கனவே என்பதை நீயுணர்வாய்! நாம் பிறந்த பொழுதில் தீர்மானம் செய்யப்பட்டது நம் மறைவும். செய்யவும் சொல்லவும் ஏராளம் இருந்தாலும் சென்றிடுவோம் நாமும், நம் வேளை வந்ததும்! அதை மறவாதே! எவ்வேலையும் தள்ளிப் போடாதே! பிறர் நினைவில் என்றும் நீங்காதே இருந்திட, நற்செயல்கள் விலக்காதே! ஒருவேளை மறுபடி நான் வந்தாலும், உனைக் காண்பேனா? அது தெரியாதே! உன் நினைவில் இருப்பேன் நானென்றும்! அது போதும்! விடை கொடு என் அன்பே!
விடை பெறுவது எளிது. விடை கொடுப்பது கடினம். Good deeds only stay - well said RGS. Like a feathers touch.
Thanks Jskls, for your appreciation. If only we understand that it is not in our little hands to retain anything or anyone, our world would be a lot wiser. Is it not? -rgs
@rgsrinivasan, As said by jskls it is easy to say bye,but it is not so easy to send off.Wonderful poem with very good words. நேற்றைக்கு பூவாய் இருந்ததெல்லாம் இன்றைக்கு சருகே என அறிவாய்! நாளைக்கும் இருப்போம் என்பதெல்லாம் ஒரு கனவே என்பதை நீயுணர்வாய்! ஒருவேளை மறுபடி நான் வந்தாலும், உனைக் காண்பேனா? அது தெரியாதே! Superb words
Thanks @Harini73 for your appreciation. Yes, it is difficult to let go a dear one. But if that is not in our hands, what else is our option? -rgs