மடமையில் மூழ்கும் மாண்புடைய மனிதர்களிடையே மங்காமல் வாழும் மகத்தான வரம் வேண்டாம் பதுமையாக நடந்துவர பயின்று கொண்டிருக்கும் பெண்களிடையே பிணியின்றி வாழும் பெரும்பேறு எனக்கு வேண்டாம் சிந்தனையில் சிறகடிக்கும் சிறப்பான சீமான்களிடையே சான்றோனாக வாழும் சரசமற்ற வரம் வேண்டாம் தீந்தமிழ் தேனருந்தி திசைமாறும் தலைவர்களிடையே தலை வணங்காமல் வாழும் தனிப்பெருமை எனக்கு வேண்டாம் வாளெடுத்து வேரறுக்கும் வன்மையான வீரர்களிடையே வலிமையாக வாழும் விபரீத வரம் வேண்டாம் கொதித்தெழுந்து கோஷமிட்டு களம்புகும் காளையறிடையே களங்கமில்லாமல் வாழும் கொடும்பெயர் எனக்கு வேண்டாம் வரம் வேண்டும் ஒரு வரம் வேண்டும் உன்னோடு நான் வாழும் வரம் வேண்டும் உள்ளத்தால் உதிரத்தால் உலகத்தார் போற்றும் வண்ணம் - என்னோடு என்றென்றும் நீ வேண்டும்
Hi Suhania! Superb poem with very good messages. If all these boons are granted, no doubt this would be a much better place to live in.
சுஜாதா, இயல்பான வாழ்வினை வாழ, இயற்கையான வாழ்வினை வேண்டி, இயற்றிய உங்கள் கவிதை என்றும் படித்து, இனிமை கொள்ள நாடுகிறேன், ஒரு வரம் வேண்டி.
அன்புள்ள சுஜா, என்னடா தலைப்பு "வரம் வேண்டும்" - ன்னு வெச்சீங்க. எல்லாமே வேண்டாம், வேண்டாம் - ன்னு சொல்லறீங்கன்னு பார்த்தா கடைசில ஹரி-க்கு தான் இந்த கவிதையா? "உனது அன்பைத் தவிர உலகத்தில் அனைத்துமே எனக்கு துச்சம் தான்" - ன்னு சொன்ன சுஜாவை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இப்படி சொல்ற பொண்ணு கெடச்சதுக்கு ஹரி "என்னதான் தவம் செய்தாரோ ? Really friend I am proud of you.