வன்னிமரப் பிள்ளையார் :- வன்னிமர விநாயகர் வலஞ்சுழியாக இருப்பது பெரும்பாக்கியம். வடக்கு நோக்கியிருப்பின் மிகவும் விசேஷமானது. அவிட்ட நட்சத்திரம் தோறும் வன்னி விநாயகரை நெல்பொரியினால் அர்ச்சித்து அபிஷேகம் செய்து ஏழைக் கன்னிப்பெண்களுக்கு உரிய தானம் அளித்துவர நல்லவரன் கிட்டித் திருமணம் கைகூடும். வாகன வியாபாரிகள் அவிட்ட நட்சத்திரத்தில் வன்னி விநாயகருக்குப் பொரியைப் படைத்து நூற்றுக் கணக்கான குழந்தைகட்கு அளித்திட தொழிலில் நல்ல லாபம் கிட்டும்.