மழலையாய் என்னை தவழ வைத்த அன்னைக்கும் மகவாய் என்னை உயிராக்கிய தந்தைக்கும் மலராய் என்னை மலர்வித்த சோதரர்களுக்கும் பெண்ணாய் என்னை உணர வைத்த அவருக்கும் என் வந்தனம் இங்கே இதுதான் என் முதல் வரி இனிமேல்தான் தேட வேண்டும் முகவரி வந்தனம் அனைவருக்கும் நட்பாய் கரம் குவித்தேன்
வந்தனம் சன்மித்திரன் அவர்களே, கவிதையுடன் வந்தமைக்கு வந்தனம், உங்கள் முதல் வரியிலேயே தெரிகிறது, தங்களின் முகவரி மகத்தான முகவரி என்பது. வாழ்த்துக்கள் மென் மேலும் படைத்திட - உங்களுக்கு, வாய்ப்புகள் கிடைக்கட்டும் மென் மேலும் படித்திட - எங்களுக்கு.
வந்தனம் உங்களுக்கும் நட்புடன் அவர்களே. வாழ்த்திய உங்களுக்கு நன்றி. முதல் கவிதை, வரவேற்பு, வரவேற்கும் விதமாய் இருக்குமா என எண்ணி இருந்தேன். வரவேற்ற உங்களுக்கும் உங்கள் வாழ்த்துகளுக்கும் நன்றி
உங்களின் முதல் வரியிலேயே தெரிகிறது எங்களுக்கு நல்ல பல பாமாலைகள் காத்திருக்கு என்று .... காத்திருக்கிறோம் நாங்களும் உங்கள் கவிதை மழையில் நனைவதற்கு .... உங்களின் வந்தனம் நன்று.... நாங்கள் வரவேற்கிறோம் உங்களை ....
வந்தனம் என்று வருகை தந்த இனிய தோழிக்கு வாழ்த்துகள் பல! இனிய கவி பல தங்கள் மூலம் எங்கள் மனம் நிறைக்க படையெடுக்கும் என்று ஆவலாய் காத்திருக்கும் ரசிகை கூட்டத்தில் நானும் ஒருத்தியாய்! அருமையான கவி வரிகள்!
கவி வரிகளின் மூலம் வந்தனம் சொன்ன கவிஞிக்கு தந்தோம் எங்களின் பூவான பாமாலை வரவேற்பு முத்தான முதல் வரி கொடுத்திட்டது உங்களுக்கு முதன்மையான முகவரி காண்பித்திடுங்கள் உங்கள் திறனான தமிழ் வளத்தை படைத்திடுங்கள் பல நலமான கற்பனை வரிகளை காத்திருக்கிறோம்....தீந் தமிழோடு நாங்களும்.
தயக்கமாய் முதலடி வைத்த எனக்கு தடையின்றி வந்த உங்கள் வரவேற்பு கண்டு மெத்த மகிழ்ச்சி. நட்பாய் சொன்ன வந்தனம் கண்டு வந்த வரவேற்பு, நீங்கள் எனக்குத் தந்த நட்பின் வற்றாத ஊற்று... நன்றி லதா, யாம்ஸ் மற்றும் யஷிகுஷி
வணக்கம் சன்மித்திரன், உங்கள் வரவு நல்வரவு ஆகட்டும். முதல்வரியே முத்தாய்ப்பாய் உள்ளது... "வந்தனம்" உங்களுக்கும்.... மேலும் பல நல்ல கவிதைகள் எழுத வாழ்த்துக்கள் தோழி.
முதல் வரியிலே காட்டிவிட்டீர்கள், உங்கள் அழகான முகவரியை உங்கள் வருகை,எங்களுக்கு ஆதாயம்.... அழகான கவிதைகள் எங்களுக்கு..... வந்தனத்தோடு ஆரம்பம் அமர்க்களம்
அன்பாய், நட்பாய் என் முதல் கவிதைக்கும் எனக்குமான உங்கள் வரவேற்பு கண்டு மெத்த மகிழ்ச்சி எனக்கு. மேலும் எழுத முயற்சிக்கிறேன் நண்பர்கள் வேணிமோகன் மற்றும் ஸ்ரேயாஸ்ரேயாஸ் அவர்களே....