வெளுத்த மேகம் கருமை கொண்டால் வறண்ட பூமி வளமை ஆகும் ! பச்சை வயல்கள் செழித்து வளர்ந்தால் உயிர்கள் யாவும் உறுபசி ஆறும் ! சிவந்து கைகள் கொடுக்கக் கொடுக்கச் சுமந்த பாவங்கள் தொலைந்து போகும் ! மஞ்சள் கரைத்து வாசல் தெளித்துப் போடும் கோலம் சிற்றுயிர் காக்கும் ! நீலக் கடலில் ஆடும் அலையில் கால்கள் நனைத்துக் குழந்தைகள் ஆவோம் ! வண்ணங்கள் அற்ற வாழ்க்கையில் வெறுமை ! எண்ணங்கள் உயர வாழ்க்கையும் இனிமை ! வண்ணங்கள் காட்டும் மழைக்கால வானவில் ! எண்ணங்கள் கொண்டே வாழ்க்கையில் வானவில் ! Regards, Pavithra பி.கு @iyerviji , மாமி, உங்கள் குழந்தை போன்ற வண்ணமயமான ,உன்னத மனத்தைப் பற்றி எண்ணிக் கொண்டிருக்கையில் தோன்றிய கவிதை இது ! என்றும் அன்புடன் , பவித்ரா
எண்ணங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறும்மம்மா ... Reminded of the தென்றல் வந்து தீண்டும் போது song. Nice one Pavithra.