ராமேஸ்வரம் கோயில் 3 ம் பிரகாரம் ரூ. 50 லட்சம் ராமேஸ்வரம் : உலகப்பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் கோயில் மூன்றாம் பிரகாரம் ரூ. 50 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட உள்ளன. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நீண்ட பிரகாரத்தை கொண்ட மூன்றாம் பிரகாரம் 1975 கும்பாபிஷேகத்தின் போதும்,2001 ல் நடந்த கும்பாபிஷேகத்தின் போதும் திருப்பணிகள் செய்யப்பட்டு வர்ண ஓவியங்கள் வரையப்பட்டன. யாத்ரீகர்கள் மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் காட்சியளிக்கும் மூன்றாம் பிரகாரத்தை அழகு படுத்துவதற்கு கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதையொட்டி ரூ. 50 லட்சம் செலவில் மூன்றாம் பிரகார தூண்கள் சீர்செய்யப்பட்டு 400 க்கும் மேற்பட்ட எனர்ஜி சேவர் விளக்குகள் அமைக்கவும், புதிய வர்ண ஓவியங்கள் வரையவும் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிகள் முடிந்தால் பகல் நேரத்திலேயே மூன்றாம் பிரகாரம் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும். இது தொடர்பாக கோயில் இணை கமிஷனர் இளங்கோவன் கூறியதாவது: ராமேஸ்வரம் வடக்கு, தெற்கு கோபுர பணிகள் விரைவில் துவங்கப்படும். கோயில் பாதுகாப்பு கருதி பிரகாரங்கள், சன்னதி நுழைவு வாயில்கள் மற்றும் சுவாமி, அம்பாள் சன்னதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதத்தில் மட்டும் சுவாமி தரிசனம்,அர்ச்சனை டிக்கெட்டுகள் மூலம் ரூ.ஒரு கோடியே 24 லட்சத்து 65 ஆயிரம் , தீர்த்த டிக்கெட்டுகள் மூலம் ரூ. 7 லட்சம் வருவாய் வந்துள்ளது. தனுஷ்கோடி இரட்டைதாளை முனியசாமி கோயில், ராமேஸ்வரம் காட்டுப்பிள்ளையார் கோயில்,குந்துகால் முனியசாமி கோயில் கும்பாபிஷேகம் விரைவில் நடத்தப்படும். கோயில் மூன்றாம் பிரகாரத்தை ரூ. 50 லட்சம் செலவில் அழகுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராமலிங்க பிரதிஷ்டை சிலைகள் ஒளி ஒலிக்காட்சியும் சீர் செய்யப்படும். விரைவில் இந்தப்பணிகள் துவங்கும் .இவ்வாறு இளங்கோ தெரிவித்தார்.
Re: ராமேஸ்வரம் கோயில் 3 ம் பிரகாரம் ரூ. 50 லட்சம Hi, Can you please write in English....please remember not all members can read tamil....thanks