யாரோ சென்ற வழியில் நானும் சென்றேன் நேரம் அறியாமல் , தடுமாறித்தான் சென்றேன் திசை அறியாமல் , தயக்கத்துடன் தான் சென்றேன் தடம் விளங்காமல் , தடைகளை மீறி விடலாமா என்று யோசனைகள் ஆயிரம் , அதில் ஆசைகள் நூறாயிரம் , நிறைவேறினால் நினைவுகள் நிஜமாகும் , நிறைவேறாவிட்டால் நிதர்சனமாகி நிற்பேன் முடிவில்லாப் பயணத்தில் !!
தடுமாற்றம் ஏன்? இதயம் சொல்லும் பாதியில் செல்ல முடிவு எப்படி இருந்தாலும் இறுதியில் ஒன்று நிச்சயமாய் உண்டு அது தான் மனதிருப்தி!! முடிவில்லாமல் நீளும் பயணத்திற்கும் முடிவுண்டு நகராமல் நிற்கும் மனதிற்கு அடுத்த அடிகளைக் காட்டி அதனை வழிநடத்தும் போது.. தொடரும் பயணத்தின் முடிவு என்றும் இனிதாகவே அமைய வாழ்த்து! தடுமாறும் கவிதையில் தடுமாற்றமில்லை அழகு மட்டுமே!
[FONT=courier new,monospace]மிக்க நன்றி !![/FONT] [FONT=courier new,monospace]சில நிர்பந்தங்கள் நிபந்தனைகளால் மட்டுமே தடுமாற்றங்களாகிவிடுகிறது வாழ்க்கை [/FONT]