மெல்லிய உடையில் மழையில் நனைந்தாள் மேலும் அழகானாள் அந்தக் கள்ளியைக் கண்ட கணத்தினிலே இந்தக் கவிஞனும் நெருப்பானான் சொல்லியே வைத்தது போல்தன் சேலையின் தலைப்பைக் கையெடுத்தாள் தன் மெல்லிய விரல்கள் வலிக்கா ததன்நீர் மங்கை தான்பிழிந்தாள் கொல்புலி கண்டும் கலங்கா நெஞ்சினன் கண்கள் செருகிநின்றான் அந்தப் பொல்லாக் காமனின் படைகள் கண்டு பொடிபொடி யாகிநின்றான் வில்லாள் சட்டென நிமிர்ந்தாள் கண்டாள் மேனியை மறைத்திட்டாள் அவன் பல்லாங் குழியின் சோழியாய் விழுந்து பதறிச் சிதறிவிட்டான் வீயார்