எனக்காக என்று வருவாய்.. என்றோ என் இமைக்குள் நிழலாடியது உன் முகம்… ஏனோ அன்று முதல் நின்று போனது என் யுகம்!! என் புன்னகைகளை திருடி மின்னலாய் மறைந்து விட்டாய்!! நானோ உன்னை நினைத்து பிறையாய் தேய்ந்து விட்டேன்….. என் கண்ணீர் முடிந்து உனக்காக உயிர் சொட்டிக் கொண்டிருக்கிறது அன்பே… என் கடைசித் துளி வடியும் முன் வந்து என்னை, உன் கையில் ஏந்திக் கொள்!! அலையே.. எதை சேர்த்து வைத்திருக்கிறாய் உன்னுள் நேசமா இல்லை கோபமா? எதுவாய் இருந்தாலும் எப்படி உன்னால் மட்டும் உன் உணர்வுகளை கரைகளின் காதுகளில் பலமாய் உரைக்க முடிகிறது?? எங்களுக்கு கேட்காமல் ரகசியமாய்…
Anbumalar, Arputhamaana kavithai. "என்கண்ணீர்முடிந்து உனக்காக உயிர்சொட்டிக்கொண்டிருக்கிறது"" Enakku migavum pidiththa varigal.:bowdownthumbsup
Anbumalar, Ungalin irandaavadhu kavithai ai naan migavum rasithaen..thumbsup என்னை கேட்டால், அலைகளுக்கு கரைகளின் மேல் அழுத்தமான காதல் என்பேன்..நொடிக்கொரு தரம் கரைகளின் பாதம் தழுவி காதல் மொழிகள் பேசுவதாக எனக்கு தோன்றும்..;-)