மகா பெரியவா ஒருநாள் அவர் ஆழ்ந்து தியானத்தில் இருந்தபோது பாம்பு ஒன்று அவருடைய தொடையில் ஏறி சுருண்டு படுத்திருப்பதைப் பார்த்து நாங்கள் பதறிப் போனோம். அந்த அறைக்குள் நாங்கள் போகக்கூடாது; அவரை எச்சரிக்கவும் வழியேதும் இல்லை. மூச்சுவிடக்கூட அஞ்சியபடியே நாங்கள் ஜன்னல் வழியாக அவரையே பார்த்துக்கொண்டிருந்தோம். அவர் கண்ணைத் திறந்து பார்த்தபோது, அவர் மடியில் பாம்பு ஒன்று படுத்திருப்பதை சன்னமான குரலில் தெரியப்படுத்தினோம். அவர் உடனே தன்னுடைய ஆடையை லேசாக உதறினார், பாம்பு ஊர்ந்து வெளியேறியது. பெரியவா எங்கள் பக்கம் திரும்பி, “அது நாலு நாளா எங்கிட்ட வர்றது, இதுக்கு என்னத்துக்கு ஆர்ப்பாட்டம் என்று மெல்லிய குரலில் முணுமுணுத்தார்”.