தூவானம் துறுவது போல் தொடர்ச்சியாய் கவிதை மலர்கள் ! நட்சத்திரங்கள் போல் கொட்டி கிடக்கு நந்தவனமாம் இவ் வலைமனையில் ! சொல் விளையாட்டில் சடு குடு ஆட செவ்வனே தேர்ந்த சிற்பிகள் பலர் வார்த்தை களால் வானவில் வடித்து வாய்பிளக்க வைக்கின்றனர் . வந்தது ஆசை எனக்கும் ஒரு நாள் வரிந்து கட்டி வடித்தேன் ஒன்றை- வாக்கியம் ஒன்றை வார்த்து எடுத்து வெட்டி போட்டேன் வரி வரியாய் . கணினி திரையில் அடுக்கி பார்த்தல் கவிதை போன்றே தோற்ற நிலை ! கள்ளத்தனமாய் வேஷமிட்டதால் "கவிதை" ஆனது என் உலர் உரை ! கவிதைகள் அரங்கில் பதிப்பித்து விட்டேன் ! இதோ, என் இந்த கிறுக்கலும் "கவிதை"யே ! கல்லடி தான் விமரிசனம் எனக்கு , தெரியும்! என்றாலும் , நானும் இப்போ கவிதாயினியே ! :biggrin2: .
ஆகா என்ன ஒரு தன்னடக்கம் ஸ்வர்ணா. உங்களது கவிதை இல்லேன்னா என் கிறுக்கல், கூட பூனை வேஷம் இட்ட புலி தான். ஆனா சூரப் புலின்னு வச்சுக்கலாம்.
Swarnalatha, Naanum unga katchi dhan... Poonaikkum pulikkum ore treatment dhan inge..:thumbsup sriniketan
//வாக்கியம் ஒன்றை வார்த்து எடுத்து வெட்டி போட்டேன் வரி வரியாய் கணினி திரையில் அடுக்கி பார்த்தல் கவிதை போன்றே தோற்ற நிலை ! கள்ளத்தனமாய் வேஷமிட்டதால் "கவிதை" ஆனது என் உலர் உரை // azhagaan varigal, neenga unmailaye pulithanunga.
wow swarna really super attempt keep on posting more and my hearty wishes to u. ungalukkula palavitha thiramai olunju irukku kavithai malai kotti velamaaga maari yengalai kuliravaikkattum Al d very best