வீசிய புயலில் தூக்கி எறியப்பட்டேன் கீழே விழுந்த நான் மீண்டும் எழுந்து நின்றேன் புயல் வலிமை இழந்து கடந்து விட்டது புயல் தந்த வலியில் வலிமை பெற்று மீண்டும் புயலை எதிர் நோக்கி நிற்கிறேன் துன்பங்கள் தாக்கி தாக்கி மன வலிமை கொண்டு துயர் நீக்கும் வகை தேடி அங்கும் இங்கும் அலைகிறேன் அமைதி கிட்டும் என்ற நம்பிக்கை கொண்டு உலவுகிறேன்
வலி மிகுந்த வரிகள்.... புயலில் (உள்ளும், புறமும்) தவிக்கும் உள்ளங்களுக்கு விரைவில் அமைதி கிட்டட்டும்...