We are under the wrong impression that many of the inventions have been amde in the recent 200 years.Old Tamil literature reveals that they had many engineering marvels in olden period. இன்று எத்தனையோ எந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன.எந்திரங்கள் இல்லாமல் வாழ இயலாது எனும் நிலை.பண்டைய தமிழகத்திலேயே சில எந்திரங்கள் புழக்கத்தில் இருந்ததாக இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. கரும்பு ஆலை :- பதிற்றுப்பத்து எனும் நூல் " அறைநர் தீம்பிழி எந்திரம் பத்தல் வருந்த"என்று குறிப்பிடுகிறது தீம்பிழி எந்திரம் என்பது இனிய சாற்றை எடுக்கும் கரும்பாலை .பத்தல் என்பது கரும்பு சாறு விழும் பாத்திரம். Borewell and swimming pool : கிணறு என்பது அகலமாக பூமியைத் தோண்டுவது. நிலத்தை அகலமாக அகழாமல் ஆழ்துளையிட்டு நீரை வெளியே எடுப்பது இன்றைய borewell இதை அந்த காலத்தில் 'அந்தக் கேணி'என்று அழைத்தனர். மணிமேகலை உரையில் உ.வே.சா அவர்கள் 'உள்ளே மறைந்த நீரை உடைய கிணறு,சுரப்பு நீர்க் கிணறு என்று குறிப்பிடுகிறார். நீச்சல் குளங்களை 'எந்திரக் கிணறு' அல்லது இலவந்திகை என்று மக்கள் அழைத்தனர். பெருங்கதை எனும் நூலில் " நிறைக்குறின் நிறைத்துப் போக்குறின் போக்கும் பொறிப்படை அமைந்த பொங்கு இலவந்திகை ' எனும் குறிப்பு காணப் படுகிறது.இதையே 'எந்திர வாவி'என்றும் அழைத்தனர். பழைய நீரை வெளியேற்றி அவ்வப்போது புதிதாக நீர் நிரப்ப உதவும் இயந்திரம் உடைய செய்குளம் .இது தான் இன்றைய நீச்சல் குளம். Fountains :- பத சக்கரம் ஆறு எதிர் நீர் தர' என்ற சொற்கள் பெரும்கதையில் காணக் கிடைக்கின்றன. ஆறு எந்திரங்கள் ஒன்றுக்கு ஒன்று மாறாய் நின்று நீரைச் சொரிதல் '1 இவை நீரூற்று அல்லது fountains யே குறி க்கின்றன. கிரேக்க வீரர்களை 'Trojan Horse ' மாதிரி ,தமிழில் 'எந்திர யானை பற்றிய குறிப்பு உள்ளது.கொங்கு வேளிரின் பெருங்கதையில் இந்த விவரம் உண்டு. சிறந்த சிற்பிகளைக் கொண்டு அரக்கு முதலியவற்றாலும், மரங்களாலும் பெரிய எந்திர யானை செய்யப்பட்டது.ஆயுத பாணிகளான 96 வீரர்கள் அதன் வயிற்றினுள் புகுந்தனர்.கால் களிலும் துதிக்கையிலும் பல வகையான போர்க் கருவிகள் ஒளித்து வைக்கப்பட்டிருந்தன.அந்த வஞ்சக யானை காட்டில் உலாவுகையில் உதயணன் மகிழ்ந்து அதன் அருகில் சென்றான்.உடனே போர்வீரர்கள் வெளிப்பட்டனர். பாதாள நீர் ஓட்டம் :underground water பூமியின் அடியில் தண்ணீர் செலுத்தப்படும் வழி'சுருங்கை 'எனப்பட்டது.சிலப்பதிகாரம், பரிபாடல் முதலிய நூல்களில் அடிக்கடி'சுருங்கை 'எனும் சொல் காணப் படுகிறது. மேலும் 'நாழிகை வட்டில்' நாழிகை தூம்பு' எனப்படும் கடிகாரங்கள்,,மணிக்கூண்டு எனப்படும் 'clock towers 'பற்றிய தகவலும் பழைய நூல்களில் காணக் கிடைக்கின்றன. பொறிமண்டலம் எனப்படும்'planetarium 'பற்றிக் கூட பெருங்கதை குறிப்பிடுகிறது. இன்னும் என்ன தான் இல்லை ? பெரிய நகரங்களில் திருமண வரவேற்பின் போது மண்டப வாசலில் எந்திர பொம்மை(ரோபோட்)கை கூப்பி வணக்கம் செய்வதைக் காண்கிறோம்..robotics கூட அந்த காலத் தமிழனுக்குத் தெரிந்திருக்கும் போல் தோன்றுகிறது. " தாமே விருந்தினருக்கு மாலை சூட்டி, பன்னீர் தெளித்து,சந்தனம் பூசி, திலகமிட்டு உபசரிக்கும் 'எந்திரப் பாவைகள் 'என உரை நூல்கள் தெரிவிக்கின்றன. Jayasala 42 __._,_.___
வாவ் !.....எத்தனை அருமையான விஷயங்கள் போட்டிருக்கீங்க.......ஆச்சர்யமாயும் பெருமையாயும் இருக்கு ஜெயாமா .மிக்க நன்றி !