அன்னையே! தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும்..! பின் தர்மம் அதை வெல்லும்! இது அன்றைய வாக்கு! இன்று சூது மட்டுமே வாழ!! தர்மம் தலை தெறிக்க வோடும் காலமம்மா! அரசன் அன்று கொள்வான்! தெய்வம் நின்று கொள்ளும்! இதுவோ அன்று! அரசணற்று தெய்வமும் வேடிக்கை பார்க்கும் காலமா இன்று?? கல்லாய் நீயானால் இந்த பிரபஞ்சத்தை காப்பது யாது?? பதில் சொல்லடி பத்தினி தாயே! நின் பிள்ளையாய் என் கதறலோடு பலரும் ஒன்றழைக்க இன்றே கொள்வாயா?? தறிகெட்டு ஆட்டம் போடும் சூது தனை??
மனிதன் தானே என்று தன் மனதிலிருக்கும் சூதினை அகற்றுகிறானோ அன்று தான் இதற்கு விடிவு காலம்.திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல. நான்கு கொலைகள் செய்பவனைக் கூட நம்பிவிடலாம். நான் நல்லவன் என்ற போர்வையில் வாழும் புல்லுருவிகள் தான் அதிகம் இங்கே.தெய்வம் வந்து கொல்ல வேண்டுமானால், உயிரோடு இங்கே இருக்க போகிறவர்கள் வெகு சிலராய் தான் இருப்பார்கள். இவர்களை மாற்றுவது நம் சக்திக்கு அப்பாற்ப்பட்டது. நம் குணம் மாறிவிடாமல் காப்பதே நமக்கு சிறந்தது.
தீதும் நன்றும் பிறர்தர வாரா .. கணியன் பூங்குன்றநாரின் வாசகம் நினைவுக்கு வருகிறது. சூதில் அசகாய சூரன் மனிதன் அவனின் மொத்த உருவம் கை அடக்க பொட்டலங்களாய் பைக்குள் . நம்பித் தான் ஆக வேண்டும் ..தீதும் நன்றும் பிறர்தர வாரா என்று. யாம்ஸ் உனது சமூக சிந்தனை அருமை :thumbsup இன்னொரு தடவ இப்பிடி லைன் மேன் ஷோ லைவா பார்த்தேன்.... அவ்வளோ தான்....:rant:rant:rant:rant:rant
சில தறிகெட்ட மனிதரால் நல்லவர்களும் அல்லவா பாதிக்க படுகிறார்கள்?? நான் வேண்டிவது அவர்களை அழிக்க வேண்டி அல்ல ! அவர்கள் மனதின் தீய எண்ணங்கள் வன்மங்களை அழிக்கவே!
இந்த என் கவிக்கு நாத்திகவாதியின் அய்யாவின் பின்னோட்டம் வராது என்று நினைத்தேன் பரவா இல்லையே...! நக்கலோடு வந்ததே அதுவே மகிழ்ச்சி! :cheersகண்டிப்பாய் அப்படி இல்லை ஏனென்றால் நாங்கள் எல்லாம் நல்ல பசங்க!!
மிக அருமையாய் சொன்னீர்கள் சரோஜ்! இவ்வளவு அழகாய் எனக்கு சொல்ல வரலை பா! மிக்க நன்றி தங்கள் பின்னூட்டங்களுக்கு!
நல்ல கருத்துள்ள கவிதை யாமினி... நட்ஸ் உங்களுக்கு நல்ல memory power... உங்க HOD அந்த காலத்துல சொன்னத இன்னும் ஞாபகம் வச்சிருக்கீங்க போல...:rotfl
நம்பிட்டேன் யாமினி. நல்லா பின்னூட்டம் குடுன்னு சொன்னா எனக்கு வைக்கிறியா ஆப்பு. கும்மி அடிக்க ஒரு கை குறையுதாம் - போம்மா போ....