கிட்டு தாத்தா ஹாயாக டிவி பார்த்து கொண்டு இருக்கற நேரத்துல.. டிவியில் அம்புஜம் பொண்ணு தோன்றவே... சந்தோஷத்தில் பட்டு மாமியை அழைக்கிறார்... கிட்டு : அடியே பட்டு... பட்டு... இங்க செத்த வந்துட்டு போ. பட்டு : இதோ வந்துட்டேன்.. .என்ன நா? கிட்டு : பாத்தியா... அம்புஜம் பொண்ணு டீவில வாரா பாரு. பட்டு : ஆமா என்ன பண்ணுறா ???? கிட்டு : என்னவோ 5 நிமிஷத்துல கிரேவி பண்ணபோறாளாம்.... பாரு.. பட்டு : 5 நிமிஷத்துலயா?...... கிட்டு : ஆமாம்டி ஆமாம்.... நீயும் ... சமையல்கட்டுல நாள் பூராவும் என்னத்த தான் பண்ணுறியோ போ... நேக்கும் ஒன்னும் புரிய மாட்டேங்குறது. அம்புஜம் பெண் டிவியில் ஏதேதோ போட்டு 3 விசில் வந்ததும் அணைத்துவிட்டு எடுத்து காண்பிக்கிறார்... ஒரு கிரேவி தெரிகிறது... கிட்டு : பாத்தியாடி... அவளும் 5 நிமிசத்துல கிரேவி பண்ணிட்டா... நீயும் அரைமணி நேரமா பண்ணிண்டே இருக்க.... ஒன்னும் வந்த பாடில்லை.... பட்டு : ஆமம்னா .. ஏன் சொல்ல மாட்டேள்.... இத்தனை வருஷம் உங்க கூட வாக்கவாக்க பட்டு... இப்போ அவா புதுசா சமைக்குறது தான் உங்களுக்கு பெருசா போயிடுது... எல்லாம் என்ன சொல்லணும்... வகையா வேளாவேளைக்கு சமைச்சு போடுறேன் இல்லையா....... நாக்குல ருசி இருக்கனும்... ஒன்னும் கொறையப்படாது... இப்படி வக்கணையா சாப்பிடணும்னா... யாரு உங்களுக்கு அன்னபட்சம் பரமான்னம் போடுறாளோ.... அங்கேயே போய் சாப்பிட்டுக்கோங்கோ..... இனிமேல் நா எதுக்கு...? நா என் பொண்ண பாக்க போறேன்.... கிட்டு : பேசி முடிச்சுட்டியா?... இல்ல முடிச்சிட்டியான்னு கேட்டேன்?.... நோக்கு வயசாடுத்து... தொட்டத்துக்கெல்லாம் கோபப்பட்டா என்னால ஒன்னும் செய்ய முடியாது.....அந்த சமையல் நல்லா இருக்கான்னு கூட நேக்கு .தெரியாதுடி செல்லம்.... நா மோந்து கூட பாத்தது இல்ல..... என்ன குத்தம் சொல்றதே நோக்கு வேலையா போயிடுது.... உன் சமையலை யாரவது அடிச்சுக்க முடியுமா? சொல்லு?... இன்னைக்கு கூட "கல்யாண ரசம்" வச்ச பாரு.... சும்மா சொல்லக்கூடாதுடி செல்லம்.... உன் கைமணம்... கைமணம் தான்.... நீ போயிடியான்னா நேக்கு காபி தண்ணி, சோறு யாரு போடுவா சொல்லு?..... சரி விடு... இனிமேல் நா டீவியே பாக்கல.. போதுமா?.... பட்டு : சரின்னா கோச்சுக்காதீங்கோ.... இருங்கோ சப்பாத்தியும்.. குருமாவும் எடுத்துண்டு வரேன்... இன்னைக்கு அசோகா ஹல்வா பண்ணினேன்... அதையும் தரேன்... சாப்பிடுங்கோ.... கிட்டு : (மனதிற்குள்)... (இவளுக்கு கிறுக்கா... இல்ல கிறுக்கு மாதிரி நடிக்குறாளா?.) சரி சரி சரி.... எடுத்துண்டு வா....ரெண்டு பெரும் உட்காந்து நிம்மதியா சாப்பிடலாம் வா..... ஊட்டி விட்டு ரொம்பநாளாரது..... பட்டு :சீ... போங்கோ நா.. நேக்கு நெறய வேல .இருக்கு... (Please Note : The names mentioned here are fictional and does not resemble any of the members of this group)
Very jolly post. The names may not resemble but conversation is ditto in my home. BTW, this may fit in Snippets, Regional languages section.