1. Want to get periods immediately before attending a religious event? Check this out for tips...
    Dismiss Notice

படித்த சில மருத்துவக் குறிப்புகள்

Discussion in 'Nature Cure' started by jaisapmm, Feb 12, 2010.

  1. jaisapmm

    jaisapmm Silver IL'ite

    Messages:
    531
    Likes Received:
    16
    Trophy Points:
    55
    Gender:
    Male
    நெஞ்சு சளி
    தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து
    நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
    ________________________________________
    தலைவலி
    ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம்,
    சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
    ________________________________________
    தொண்டை கரகரப்பு
    சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி
    செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
    ________________________________________
    தொடர் விக்கல்
    நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால்
    தொடர் விக்கல் தீரும்.
    ________________________________________
    வாய் நாற்றம்
    சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு
    மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.
    ________________________________________
    உதட்டு வெடிப்பு
    கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய்
    கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.
    ________________________________________
    அஜீரணம்
    ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும்
    கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
    ________________________________________
    குடல்புண்
    மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி
    சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.
    ________________________________________
    வாயு தொல்லை
    வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை
    நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
    ________________________________________
    வயிற்று வலி
    வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று
    வலி நீங்கும்.
    ________________________________________
    மலச்சிக்கல்
    செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர
    மலச்சிக்கல் தீரும்.
    ________________________________________
    சீதபேதி
    மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.
    ________________________________________
    பித்த வெடிப்பு
    கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த
    வெடிப்பு குணமாகும்.
    ________________________________________
    மூச்சுப்பிடிப்பு
    சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து
    சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி
    மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.
    ________________________________________
    சரும நோய்
    கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும்
    சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.
    ________________________________________
    தேமல்
    வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில்
    தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.
    ________________________________________
    மூலம்
    கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன்
    சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.
    ________________________________________
    தீப்புண்
    வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி
    வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.
    ________________________________________
    மூக்கடைப்பு
    ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக்
    காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர
    மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
    ________________________________________
    வரட்டு இருமல்
    எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.


    மார்புச் சளி
    வெறும் வயிற்றில் இஞ்சி சாறில் தேன் கலந்து பருகினால் சோர்வு
    நீங்கும், மார்புச் சளி அகலும்.
    ________________________________________
    சளிக் காய்ச்சல்
    புதினா கீரையை நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ டிகாஷன் போல் செய்து
    சாப்பிட்டால் சளியால் வரும் காய்ச்சல் குணமாகும்.
    ________________________________________
    இருமல், தொண்டை கரகரப்பு
    பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம்,
    தொண்டைக் கரகரப்பு போகும்.
    ________________________________________
    சளி
    பூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து
    கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் சளி சீக்கிரம் குணமாகும்.
    ________________________________________
    டான்சில்
    வெள்ளைப் பூண்டு, இஞ்சி சாறு இரண்டையும் சேர்த்து அரைத்து இதனுடன்
    தேன் கலந்து காலை மாலை உணவுக்கு முன் சாப்பிட்டால் டான்சில் கரையும்.
    ________________________________________
    வயிற்றுப் போக்கு
    சிறிது கசகசாவுடன் நாட்டுச் சர்க்கரையை சேர்த்து வாயில் போட்டு
    சாப்பிடவும். இது போல் வெறும் வயிற்றில் காலை மட்டும் சாப்பிட்டு வந்தால்
    மூன்று நாளில் குணமாகும்.
    ________________________________________
    வாயுக் கோளாறு
    மிளகைப் பொடி செய்து பெருங்காய பவுடர் சேர்த்து தினமும் சுடுநீரில்
    கலந்து ஒரு தேக்கரண்டி சாப்பிட்டால் வாயுக் கோளாறு நீங்கும்.
     
    Loading...

  2. Mahanu

    Mahanu Silver IL'ite

    Messages:
    460
    Likes Received:
    139
    Trophy Points:
    95
    Gender:
    Female
    Hi, Thanks for the useful home remedies tips.
     
  3. raamraam

    raamraam New IL'ite

    Messages:
    3
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Male
    INNUM sila kurippugal,

    Oomathai ilaiyai nalLennai-yil vadhakki kattinaal, Mootu vali theerum.

    Murungai ilaiyai Vilakkennai-yil vadhakki othadam koduththaal MOOTU , IDUPPU, VAADHAVALI theerum.

    Sincerely,
    RAAMRAAM.
     
  4. pussy

    pussy Gold IL'ite

    Messages:
    4,186
    Likes Received:
    304
    Trophy Points:
    185
    Gender:
    Female
    Thanks for sharing home remedies.
    Its really useful.
     
    Last edited: Feb 15, 2010
  5. tsselvi

    tsselvi New IL'ite

    Messages:
    1
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    mathavidai siraga varuvathatku enna seiya vendum.pls give ur advice. give some tips.muligai vaithyam ethavathu undu endral sollavum.
     
    Last edited by a moderator: Mar 30, 2010

Share This Page