( மனைவி அமைவதெல்லாம் மெட்டு) பழகப் பழகிடத் தான் பாட்டும் எழுத வரும் கலங்கி நிற்ப தென்ன கவிதை உனக்கு வரும் (2) இலக்கணம் புரிந்திட வேண்டும் இலக்கியம் அறிந்திட வேண்டும் (2) எதுகை மோனைகள் என்னும் பதங்களும் புரிந்திட வேண்டும் (பழகப் பழகிடத் தான் பாட்டும் எழுத வரும்) ஒருமுறை நீ செய்த கவிதை மறுமுறை நீ பார்க்க வேண்டும் மறுமுறை நீ பார்த்த பின்னர் மாசுகள் அகன்றிட வேண்டும் (பழகப் பழகிடத் தான் பாட்டும் எழுத வரும்) சுவையுடன் கவிபாடும் ஆற்றல் சமுதாய பார்வையும் வேண்டும் இவைகளை நீ கற்றுத் தேர்ந்தால் இலக்கிய உலகுன்னைப் பாடும் (பழகப் பழகிடத் தான் பாட்டும் எழுத வரும்)