நீ என்னை சந்திக்காத ஒவ்வொரு நாளும் நீ என் காதலை இழக்கிறாய் தெரியுமா... என்னை சந்தித்தித்த பின் நீ நிச்சயம் வருந்த போகிறாய் உன்னோடு நானில்லாத நாட்களை எண்ணி .. உன்னை பார்க்கும் நாளில் பார்த்த அந்த மணியிலேயே தொடங்கிவிடும் உன்னோடான என் வாழ்வு.. உன் பேர் தெரியாது உன் முகம் தெரியாது உன் மனமும் தெரியாது என் கவிதைகளில் கனாக்களில் வந்து போகிறாய் பேரில்லாமல் வடிவில்லாமல் ... நீ என் வாழ்வில் வரும் நாளிலிருந்து உன் பேர் என் பேரிலும் உன் முகம் என் கனாவிலும் உன் மனம் என்னிடத்திலும் வரும் என்னவன் என்ற உரிமையில்... மழையில் நனைய வேண்டும் உன் கை கோர்த்தபடி .. வாழ்வின் எல்லை வரை நடக்க வேண்டும் உன் விரல் பிடித்தபடி .. காதலோடு கதைகள் பேச பல இரவுகள் வேண்டும் உன் மார்பில் சாய்ந்தபடி.. மரணம் வரை உறங்க வேண்டும் உன் மடியினில் சாய்ந்தபடி .. உன் கண்களும் மனமும் எனை கண்டுகொள்ளும் தானே.. உனக்குள்ளும் இத்தனை காதலும் கனவுகளும் இருக்கும் தானே .. இன்னும் எத்தனை நாட்கள் காத்திருக்க வைப்பாய்.. வீணாவது உனக்கான காதல்தான்.. இனியும் காத்திருக்க வைக்காதே.. பின் வந்து எனை குற்றம் சொல்லாதே .. நம்மை நனைக்க காத்திருக்கும் மழை... நம்மை காண காத்திருக்கும் இரவுகள்.. நாம் பேச காத்திருக்கும் கதைகள்... இவற்றோடு காத்திருக்கிறோம் நிறைய காதலோடு....நானும் என் இதயமும்!...