நேற்று இந்த என் இணைய வாழ்வில் இன்பமான தருணம் உங்கள் அனைவரின் அன்புக்கு நன்றி சொல்ல இது நல்ல தருணம் அன்பு, பாசம், நட்பு, என அத்தனையும் கலந்து நேற்று என் மீது பொழிந்த இன்ப மழை என்னை மூழ்கடித்து திணறடித்தது நன்றி என்ற ஒரு வார்த்தை போதுமா?? உங்கள் அனைவரின் அன்புக்கும்..... நானும் என் சார்ந்த அனைத்திலும் முதலாய் இருக்கும் என் தோழி ரோஜாவுக்கு முதல் நன்றி அன்னையாய் எனை ஆதரித்து என் முயற்சிகள் அனைத்திற்கும் ஆசி தரும் விஜிமாவுக்கு நன்றி கண்ணில் பட்டதை கவிதையாக்கிக் கொண்டிருந்த எனக்கு மலர்களின் பட்டியல் தந்த நண்பர் ஜே வீக்கு நன்றி மலர்களை வாசித்து, தங்கள் பின்னூட்டங்களால் அந்த மலர்களுக்கு மேலும் உரமிட்ட எனதன்பு மலர்கள், பத்மினி மா, கங்கா மா, மல்லிகா, ஸ்ரீனி, யாமினி, சுதா, வினு, சந்த்யா, பிரியா, வைஷு, லதா, ரதி, ராம், சாய், சந்தியா, அனிதா, தீபா என அத்தனை நண்பர்களுக்கு நன்றிகள் பல இந்த நட்பு வட்டம் இன்னும் பெருகும், இன்று வரை உள்ள நண்பர்களுக்கு இன்னும் சேர விருக்கு புது நண்பர்களுக்கும் நன்றிகள் பல உங்கள் அனைவரின் அன்புக்கும், நீங்கள் தரும் பாசத்துக்கும், ஊக்கத்திற்கும், கோடான கோடி நன்றிகள் .....
நன்றி பல கூறினாலும் அதில் எங்கள் மனம் நிறைத்தது அனைவரையும் நீங்கள் குறிப்பிட்ட விதமே!! நாங்கள் அனைவரும் இங்கிருக்கிறோம் உங்கள் கவி மழையில் நனைந்து மகிழ! ஆஹா கரும்பு தின்ன கூலியாய் நின் கவிகள் படிக்க நன்றியா?? நன்றிகள் நிராகரிக்க பட்டன! அன்பே அடி முதல் வேராய் நம்மை இங்கு தாங்க அதுவே ஆதராமாய் கொண்டு வாழும் நம்மிடையே நன்றிகள் ஏன் தோழி?? கண்கள் பணிகின்றன நின் தன்னடக்கத்தையும் பணிவன்பயும் கண்டு! மேலும் பல படைத்திடுங்கள் நாங்கள் படித்து மகிழ்ந்து உள்ளம் நெகிழ! வாழ்த்துக்கள் பல உங்களுக்கு!
hi veni dear.... nanri navalalai evvalavu azhagaga koorineergal.... namakkulla ethukka pa ithellam.... namakkul intha azhagana natpinai arimugam seitha intha IL ku kooruvom namathu nanriyai...
நன்றி சொல்ல வந்த மலரே நானும் நனைகிறேனே அதிலே நீ கூறிய நன்றியால் அல்ல அதை வடித்த உன் திறமையால் நெஞ்சம் நிறைந்தது தோழியே என்னை நீ அழைத்த குரலினால். எழுது தோழியே உன் விரல்கள் வலிக்கும் வரை உன் கற்பனை வற்றும் வரை அமுத சுரபியாய் ...... அருவியாய் அதில் அமிழ்ந்து போக ஆசைப் படுகிறேன். .......... நான்
வேணி, உங்களது, இனிய இணைய பயணத்தின் 5000 மாவது ,பதிவை கடந்ததற்கு வாழ்த்துக்கள் பற்பல! உங்களது,இந்த thread இன் முலமே, இதை உணர்ந்தேன் நான். பூக்களின் ராணி,தொடர்ந்து பற்பல படிகள் தாண்ட, வாழ்த்துக்கள் ! நன்றி,நவிலளில்,வாழ்த்துக்களையும் ஏற்றுக்கொள்ளவும்!
அன்பு கண்ணம்மா, உங்கள் மலர் போன்ற "மலர்" பற்றிய தொகுப்பு கவிதைகளையும், ஆத்மார்த்தமான அனுபவமிக்க கவிதைகளையும், மற்றும் உங்கள் அறிவார்ந்த அழகான பின்னூட்டங்களையும் படிப்பதற்கு நாங்கள் அல்லவா நன்றிகள் பல சொல்ல வேண்டும் உங்களுக்கு... நன்றி சொல்ல நீங்கள் எழுதிய இந்த கவிதையும், உங்கள் பாமாலையில் மேலும் ஒரு நல்வைரமாய்.... வாழ்த்துக்கள் கண்ணம்மா!!! :kiss
anbu thozhi veni, nandike oru kavithai ezhutha ungalaal thaan mudiyum...parattukal pala.. natpu vattam thodarattum..