வாசனை மலர்கள் எடுத்துரைக்குமோ அவள் மனதை குளிற்தென்றல் சுமந்து செல்லுமோ அவள் காதலை தாகம் தீர்க்கும் மேகம் தணிக்குமோ அவள் தவிதவிப்பை பௌர்ணமி நிலவு குளிர்விக்குமோ செவிமடல்களின் சூட்டை.... இதயம் அதிவேகமாய் துடிதுடிக்க படபடக்கும் பட்டாம்பூச்சியாய் மனம் சிறகடிக்க வயிற்றை பிசையும் உணர்வோ உச்சி முதல் பாதம் வரை அதிர்வலைகளை பரப்ப எண்ணங்களை கோர்வையாக்கி தன் காதல் சொல்ல வந்தவள் தொலைந்த வார்த்தைகளை ஒவ்வொன்றாய் தேடுகிறாள் அன்பானவனின் குரல் கேட்ட நொடிதனில் ! பி.கு. சொல்ல தான் நினைக்கிறேன் பாடல் கேட்டதில் தோன்றிய கற்பனை
காதல் வந்தால் வார்த்தைகளும் மறந்து போகும் .கண்களுக்கு தானே வேலை .கற்பனை என்பதை ஏற்றுகொள்கிறோம் .கவிதை நன்று