தொடக்கத்தில் சேர்த்த துணை பிரியாதது இறக்கும் வரை இணையுடன் இருக்கும் இருவாச்சியது இருவாச்சி பறவை ஒன்று திரிகின்றது அதன் இனிய குணம் பார்க்க மனம் மறுகின்றது மாறுகின்ற மனம் என்றும் நிலையற்றது நம் நிலையான மனதினிலே சுவையுள்ளது சுவையான பேச்சு என்றும் தெவிட்டாதது மனம் சுவையாக பேசுவதை விரும்பாதது விரும்பாத காரியத்தில் நீ இறந்காதிரு இறங்கி விட்டால் இறுதி வரை பின்வாங்காதிரு பின்வாங்கும் மனம் நமது இயல்பானது அதை இன்றே நீ உதைதெரிந்திடு நமை உதைத்தெறியும் எண்ணம்கொண்டோர் இருகின்றனர் நீ பந்தாக இருந்து மீண்டெழு பாறையாயிராதே பாறையாயிருந்தாலும் அதிலும் சிறிது நீர் தொற்றும் மனிதன் மனதிலும் நீர் தொற்றினால் இது முற்றும்
Hai PGR, நமை உதைத்தெறியும் எண்ணம்கொண்டோர் இருகின்றனர் நீ பந்தாக இருந்து மீண்டெழு பாறையாயிராதே Truly said. Raise and wake up Be Bold and face the situation whatever may be. SUCCESS will be the result. Lovelylines
வாழ்க்கையில் எதையும் எதிர்கொள்ளும் தைரியும்,நம்பிக்கையும் இருந்தால் விண்ணையே அடையலாம். பாராட்டுக்கள்.
தொடக்கமும் முடிவுமாய் நீ தந்த வரிகளின் சுவை மட்டும் என்றுமே தெவிட்டுவதில்லை! அழகான ஆழமான வரிகள் தோழா!