தென்னை மரம் அந்த மூன்று நாட்களில் அவள் உபயொகித்த நாப்கினை அதற்குக் கீழேதான் புதைத்துப் போனாள் - என் மனைவி எத்தனையோ ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் கழுவிய நீரை அதன்மீது தான் ஊற்றினாள் - என் அம்மா இரவில் ஒன்றுக்கு போக வயிற்றை முட்டியபோது கொல்லைக்குப் பின்னல் போக பயந்து வீட்டின் ஓரத்தில் இருக்கும் அதன் மீதுதான் பெய்வான் - என் மகன் தனக்கு விழுந்த முதல் பல்லை அதற்குக் கீழேதான் பத்திரமாகப் புதைத்து வைத்திருக்கிறாள் - என் மகள் இதையெல்லாம் எப்படிச் சொல்வேன் இந்த வருடம் தத்த திவசத்தின் போது "இது அவரு நட்டது டா இதுல அவரு உசிரு இருக்கு " என்ற என் அப்பாவிடம் -முத்தாசென் கண்ணா
Yeppadi solla mudiyum, naam dhan mattravar uyiraai madhippadhai siridhu kooda karunai illaamal, seerazhikkirome.. sriniketan