தீண்ட மறுக்கும் தென்றல் உன் கரம்பற்றி நான் நிற்கையில் என் கால் முத்தமிட்ட அலைகள் நீ இல்லாத என்னைக் கண்டு ஒதுங்குகின்றன நிலவை விடுத்து நம்மைப்பார்த்துக் கண்சிமிட்டிய நட்சத்திரங்கள் நீ இல்லாததால் முகம் திருப்பிக் கொள்கின்றன தன் களங்கத்தை மறந்து பளீரிட்ட நிலவோ முகத்தில் திரையிட்டு மறைந்து நிற்கிறது சினேகமாய்ச் சிரித்துச் செல்லும் நண்டு கூட இன்று சீற்றத்துடன் பார்க்கிறது என்னருகில் நீ இல்லாததால் தென்றல் கூட என்னைத் தீண்ட மறுக்கிறது. வீயார்