உன் சுவாசம் தீண்டிய பொருட்களின் தீண்டலில் உன் நேசம் உணர்ந்தேன் உன் விரல் தீண்டிய பொருட்களின் தீண்டலில் உன் இதயம் உணர்ந்தேன் அதை நான் தீண்டுகையில் என்னுளே வந்த சிலிர்ப்பு உன் தீண்டலாலா?? இல்லை நீ தீண்டியதை, தீண்டிய என் தீண்டலாலா??
அன்புள்ள வினு, கவிதை ரசித்து கருத்து சொன்ன தோழிக்கு நன்றி. நீங்களே ஒத்துகறீங்க. என் பக்கம் திரும்பறதே இல்லைன்னு:rant ஹே பரணி-யோட கிராப்ட்ஸ் பாத்தேன், கலக்கறாங்க :thumbsup
நேசம் தீண்டிய சுவாசம் என் விரல் வழி உன் இதயம் நுழைய , "நீ" "நான்" என பங்கு போட்டு "நாம்" ஆன நம் தீண்டலின் தாண்டலின் சிலிர்ப்பில் சிறிய உன் இதயம் இப்போது சில்லறையாய் சிதறலில். தீண்டல் ...........மெய். :thumbsup
அவன் தீண்டல் சுகமா??? தீண்டியதை தீண்டல் சுகமா?? அக்கா நீங்கள் சுகமா??? உங்கள் தீண்டலை (கவிதையை) தீண்டியது எனக்கு சுகமே....
வேணி உங்கள் கவிதை எனைத் தாக்கி, நான் தமிழைத் தாக்கி, தமிழுக்கு உண்டான காயமே இந்த கவிதை. தமிழும், வாசகர்களும், எனைத் தாக்க வர வேண்டாம் தயவுசெய்து. உயிரின் உயிரே உயிர்த்தெழுவேனா? என் விரல் தீண்டிய அந்தச் சிறு, அஃறிணைப் பொருட்கள் உனைச் சேர, உன் விரல் தீண்டி அவை உயிர் பெற்றன, உனை உயிராய் நினைக்கும் எனை நீ தீண்டி, உயிர்பெற உன்னருகே வருவேனா என் உயிரே? உன்னருகே வரும் காலம், கனிய காத்திருப்பேன்.....