சந்திக்கையில் நேரம் விரைவில் சென்று விடுகிறது என் தாகம் தீருமுன்னரே மழையும் நின்று விடுகிறது வருவேனென்று நீ கூறவில்லை இருந்தும் காலடி ஓசை கேட்டு இருவிழிகளும் ஏன் அலைபாய்கிறது நான் விரும்புவதால் நீ வருவாயா என்ன? மேகம் மறைப்பதால் இரவு வருமா என்ன நீ அருகிலிருந்தால் குளிரும் நிலவு நீ விலகியதும் சுடுகிறது பகல்களை விட இரவுகளே தேவலாம் கனவிலாவது காண முடிகிறதே உன்னை சந்திக்கையில் நேரம் விரைவில் சென்று விடுகிறது என் தாகம் தீருமுன்னரே மழையும் நின்று விடுகிறது வீயார்