[JUSTIFY]சலனங்களும், இடையூறுகளும் நிறைந்த உலக வாழ்வில், சரியான கண்ணோட்டம் இல்லையென்றால், மன நிம்மதி பெற முடியாது! சரியான கண்ணோட்டம் இருந்தால், மன அமைதி பெறுவது மிகவும் எளிது. சில உதாரணங்கள் சொல்லுகிறேன். சிலரிடம், என்ன சொன்னாலும் தவறாகவே எண்ணுவார்கள். 'உங்கள் தம்பியின் வீடு மிக அழகாக இருக்கிறது!' என்ற பாராட்டைக் கேட்டவுடன், 'அப்படீன்னா, என் வீடு அழகாய் இல்லையா?' என்று விவாதத்திற்கு வருவார்கள். 'உங்கள் நண்பரின் மகன் மிகவும் புத்திசாலி!' என்று சொன்னால், 'என் மகன் மட்டும் மக்கா?' என்று சண்டைக்கே வந்துவிடுவார்கள்! யார் யாரைப் பாராட்டினாலும், தன்னுடன் ஒப்பிட்டு, மனம் கலங்குவார்கள்! 'உங்கள் கார் விலை உயர்ந்ததாக இருக்கிறதே!' என்று அவரையே பாராட்டினாலும், 'நம்மைப் பார்த்துக் கண் வைக்கிறானே!' என்று தன் மனதில் அங்கலாய்க்க ஆரம்பித்து, நிம்மதியை இழப்பார்கள்! இவற்றையே தவறான கண்ணோட்டம் என்று குறிப்பிடுகிறேன். மனம் திறந்து நல்லவற்றைப் பாராட்டுவதும் , பிறரைப் பற்றிய பாராட்டைக் கேட்டால், நிஜமான மகிழ்ச்சி பெற விழைவதும், நல்ல கண்ணோட்டத்தின் அஸ்திவாரங்கள்! இதை மனதில் நிறுத்தி, அமைதியாக வாழ நாம் அறிவோம்! [/JUSTIFY] :thumbsup
Dear Raji, You are conveying some of the most essential ingredients for a peaceful and happy life through many of your blogs. I am very grateful to you for writing such wonderful messages. Kindly do not address me Sir, and address me Viswa. I consider you as my sister and that is why I am taking the liberty of addressing you by name. Viswa