1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

தமிழ்(பழைய) திரைப்பட பாடல்...வரிகள்

Discussion in 'Music and Dance' started by Yashikushi, Jun 21, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தில்
    மயங்கிய ஒளியினைப் போலே


    திரைப்படம்:பாசம்
    இசை:எம்.எஸ்.விஸ்வநாதன,டி.கே. ராமமூர்த்தி
    பாடகர்கள்:p.b..ஸ்ரீனிவாஸ்
    இயற்றியவர்: கண்ணதாசன்

    மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தில்
    மயங்கிய ஒளியினைப் போலே
    மன மயக்கத்தை தந்தவள் நீயே ஒ
    வழியில் வந்தவள் நீயே
    பூமியில் ஓடிய புது வெள்ளம் போலே
    பொங்கி வந்தவன் நீயே
    நெஞ்சில் தங்கி வந்தவன் நீயே
    எந்தன் தலைவன் என்பதும் நீயே
    ஒ தாவி தழுவ வந்தாயே

    (மாலையும் )

    காவிரி கெண்டை மீன் போலே
    இரு கைகள் படாத தேன் போலே
    கோவில் முன்புற சிலை போலே
    எனை கொஞ்சி அணைத்த வெண் மலரே
    பூ மழை பொழியும் கொடியாக
    பூரண நிலவின் ஒளியாக
    மாமணி மாடத்து விளக்காக
    மார்பில் அணைத்த மன்னவனே
    என்னை மார்பில் அணைத்த மன்னவனே

    (மாலையும்)

    தலைவன் திருவடி நிழல் தேடி
    நான் தனியே எங்கும் பறந்தோடி
    ஒரு நாள் அடைந்தேன் உன் கரமே
    எந்தன் உயிரும் உடலும் அடைக்கலமே
    திங்கள் முகத்தில் அருள் ஏந்தி
    செவ்வாய் இதழில் நகை ஏந்தி
    இளமை என்னும் படை கொண்டு
    என்னை வென்றாயே நீ இன்று
    என்னை வென்றாயே நீ இன்று

    (மாலையும் )
     
  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    உறவு சொல்ல ஒருவரின்றி வாழ்பவன்
    அவன்உலக வாழ்க்கைப் பள்ளியிலே மாணவன்


    திரைப்படம்:பாசம்
    இசை:எம்.எஸ்.விஸ்வநாதன,டி.கே. ராமமூர்த்தி
    இயற்றியவர்: கண்ணதாசன்
    பாடகர்கள்:பி.சுசீலா

    உறவு சொல்ல ஒருவரின்றி வாழ்பவன் -
    அவன்உலக வாழ்க்கைப் பள்ளியிலே மாணவன்
    இரவு மேடை அரசனாகப் போனவன் -
    நெஞ்சில்இரக்கமுள்ள திருடனாக ஆனவன்
    இரக்கமுள்ள திருடனாக ஆனவன்
    (உறவு)


    பொன்பொருளைக் கொள்ளை கொள்ள ஓடுவான் -
    யாரும்அன்னை என்று சொல்லி விட்டால் வாடுவான்
    தன் பொருளை அவர்க்கு தந்து தேற்றுவான் -
    நெடுஞ்சாலை வரை துணைக்கு வந்து வாழ்த்துவான்
    சாலை வரை துணைக்கு வந்து வாழ்த்துவான்
    (உறவு)


    பசியெடுத்தால் பாய்ந்து செல்லும் புலி அவன் -
    ஆனால்பழக்கத்திற்கும் பாசத்திற்கும் இனியவன்
    கலையழகை ரசிப்பதிலே புதியவன் -
    உடற்கட்டழகில் சிறந்திருக்கும் இளையவன்
    கட்டழகு திரண்டிருக்கும் இளையவன்
    (உறவு)


    இன்று நாளை அவனும் கூட மாறலாம் -
    அவன்இரவில் தூங்கி பகலில் கூட வாழலாம்
    கன்று கண்ட தாயைப் போல ஆகலாம் _
    அன்புகாதல் பாசம் அவனும் கூடக் காணலாம்
    காதல் பாசம் அவனும் கூடக் காணலாம்
    (உறவு)
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    பால் வண்ணம் பருவம் கண்டு
    வேல் வண்ணம் விழிகள் கண்டு


    திரைப்படம்:பாசம்
    இசை:எம்.எஸ்.விஸ்வநாதன,டி.கே. ராமமூர்த்தி
    இயற்றியவர்: கண்ணதாசன்
    பாடகர்கள்:பி.சுசீலா,p.b..ஸ்ரீனிவாஸ்


    பால் வண்ணம் பருவம் கண்டு
    வேல் வண்ணம் விழிகள் கண்டு
    மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்

    கண் வண்ணம் அங்கே கண்டேன்
    கை வண்ணம் இங்கே கண்டேன்
    பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்


    கன்னம் மின்னும் மங்கை வண்ணம்
    உந்தன் முன்னம் வந்த பின்னும்
    அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசை இல்லையா?
    கன்னம் மின்னும் மங்கை வண்ணம்
    உந்தன் முன்னம் வந்த பின்னும்
    அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசை இல்லையா?
    கார் வண்ண கூந்தல் தொட்டு
    தேர் வண்ண மேனி தொட்டு
    பூ வண்ண பாடம் சொல்ல எண்ணம் இல்லையா?


    ஆண்: பால் வண்ணம் பருவம் கண்டு
    வேல் வண்ணம் விழிகள் கண்டு
    மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்


    மஞ்சள் வண்ன வெய்யில் பட்டு
    கொஞ்சும் வண்ண வஞ்சி சிட்டு
    அஞ்சி அஞ்சி கெஞ்சும் போது ஆசையில்லையா?
    மஞ்சள் வண்ன வெய்யில் பட்டு
    கொஞ்சும் வண்ண வஞ்சி சிட்டு
    அஞ்சி அஞ்சி கெஞ்சும் போது ஆசையில்லையா?
    நேர் சென்ற பாதை விட்டு
    நான் சென்ற போது வந்து
    வா வென்று அள்ளிக் கொண்ட மங்கை இல்லையா?


    பெண்: கண் வண்ணம் அங்கே கண்டேன்
    கை வண்ணம் இங்கே கண்டேன்
    பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்


    பெண்: பருவம் வந்த காலம் தொட்டு
    பழகும் கண்கள் பார்வை கெட்டு
    என்றும் உன்னை எண்ணி எண்ணி ஏங்கவில்லையா?
    ஆண்: நாள் கண்டு மாலையிட்டு
    நான் உன்னை தோளில் வைத்து
    ஊர்வலம் போய் வர ஆசை இல்லையா?


    பெண்: கண் வண்ணம் அங்கே கண்டேன்
    கை வண்ணம் இங்கே கண்டேன்
    பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்

    ஆண்: பால் வண்ணம் பருவம் கண்டு
    வேல் வண்ணம் விழிகள் கண்டு
    மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    தேர் ஏது சிலை ஏது திருநாள் ஏது
    தெய்வத்தையே மனிதரெல்லாம் மறந்த போது

    திரைப்படம்:பாசம்
    இசை:எம்.எஸ்.விஸ்வநாதன,டி.கே. ராமமூர்த்தி
    இயற்றியவர்: கண்ணதாசன்
    பாடகர்கள்:


    தேர் ஏது சிலை ஏது திருநாள் ஏது..
    தெய்வத்தையே மனிதரெல்லாம் மறந்த போது..
    பூவேது கொடி ஏது வாசனை ஏது..
    புன்னகையே கண்ணீராய் மாறும் போது..

    ஊரேது உறவேது உற்றார் ஏது..
    உறவெல்லாம் பகையாக ஆகும் போது..
    ஒன்றேது இரண்டேது மூன்றும் ஏது..
    ஒவ்வொன்றும் பொய்யாகிப் போகும் போது..

    தேர் ஏது சிலை ஏது திருநாள் ஏது..
    தெய்வத்தையே மனிதரெல்லாம் மறந்த போது..
    இனம் பார்த்து குணம் பார்த்து மனம் சென்றது..
    மனம் போன வழி தேடி உயிர் சென்றது..
    உயிர் போன பின்னாலும் உடல் நின்றது..
    உதவாத உடலிங்கு அசைகின்றது..

    தேர் ஏது சிலை ஏது திருநாள் ஏது..
    தெய்வத்தையே மனிதரெல்லாம் மறந்த போது..

    அசைகின்ற உடல் தேடி உயிர் வந்தது..
    உயிர் வந்த வழி தேடி மனம் வந்தது..
    மனத்தோடு குணத்தோடு இனம் வந்தது..
    இனத்தோடு இனம் சேரும் தினம் வந்தது..


    தேர் ஏது சிலை ஏது திருநாள் ஏது..
    தெய்வம் போல் மனிதரெல்லாம் மாறும் போது...
     
    Last edited: Feb 6, 2011
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    திரைப்படம்:புதிய பூமி

    சின்னவளை முகம் சிவந்தவளை நான்


    திரைப்படம்:புதிய பூமி
    இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்
    இயற்றியவர்:கண்ணதாசன்
    பாடகர்கள்:டி.எம்.சௌந்தரராஜன்,பி.சுசீலா


    சின்னவளை முகம் சிவந்தவளைநான்
    சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு
    சின்னவளை முகம் சிவந்தவளைநான்
    சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு

    என்னவளைக் காதல் சொன்னவளை
    நான் ஏற்றுக் கொள்வேன் வளையிட்டு
    வந்தவளைக் கரம் தந்தவளை
    நீ வளைத்துக் கொள்வாய் வளையிட்டு
    பூக்குவளை கண்கள் கொண்டவளைபுது
    பூப் போல் பூப் போல் தொட்டு


    தூயவளை நெஞ்சைத் தொடர்ந்தவளை
    மெல்லத் தான் தொட்டால் துவளும்
    பால் மழலை மொழி படித்தவளை
    சுகம் பட்டால் பட்டால் படியும்

    கன்னம் மாதுளை கனிந்த சேயிழை
    கரைத்தால் கரையாதோ
    இரு கண்ணால் சொன்னால் பக்கம்
    வந்தால் தந்தால்நெஞ்சில் அணைத்தால் அடங்காதோ


    வந்தவளைக் கரம் தந்தவளை
    நீ வளைத்துக் கொள்வாய் வளையிட்டு
    என்னவளைக் காதல் சொன்னவளை
    நான் ஏற்றுக் கொள்வேன் வளையிட்டு

    வான மழை போல் ஆனவளை
    சுவை எங்கே எங்கே மறப்பாய்
    நீ அவளை விட்டுப் போகும் வரை
    அது இங்கே இங்கே இருக்கோ

    மின்னும் கை வளைமிதக்கும்
    பெண்களை அசைத்தால் அசையாதோ
    அது இன்னும் கொஞ்சம் என்று
    பெண்ணைக் கெஞ்சும் வரை சுவைத்தால் சுவைக்காதோ


    வந்தவளைக் கரம் தந்தவளை
    நீ வளைத்துக் கொண்டாய் வளையிட்டு
    பூக்குவளை கண்கள் கொண்டவளை
    புது பூப் போல் பூப் போல் தொட்டு
    சின்னவளை முகம் சிவந்தவளை
    நான் சேர்த்துக் கொண்டேன் கரம் தொட்டு
    என்னவளைக் காதல் சொன்னவளை
    நான் ஏற்றுக் கொண்டேன் வளையிட்டு
     
    Last edited: Mar 4, 2011
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நான் உங்கள் வீட்டுப் பிள்ளை இது ஊர் அறிந்த உண்மை

    திரைப்படம்:புதிய பூமி
    இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்
    இயற்றியவர்:பூவைசெங்குட்டுவன்
    பாடகர்கள்:டி.எம்.சௌந்தரராஜன்

    நான் உங்கள் வீட்டுப் பிள்ளை
    இது ஊர் அறிந்த உண்மை


    நான் உங்கள் வீட்டுப் பிள்ளை
    இது ஊர் அறிந்த உண்மை
    நான் செல்லுகின்ற பாதை
    பேரறிஞர் காட்டும் பாதை
    நான் உங்கள் வீட்டுப் பிள்ளை
    இது ஊர் அறிந்த உண்மை
    நான் செல்லுகின்ற பாதை
    பேரறிஞர் காட்டும் பாதை

    காலம்தோறும் பாடம் கூறும்
    மாறுதல் இங்கே தேவை
    ஏழை எளியோர் துயரம் போக்கும்
    செயலே எந்தன் சேவை
    காலம்தோறும் பாடம் கூறும்
    மாறுதல் இங்கே தேவை
    ஏழை எளியோர் துயரம் போக்கும்
    செயலே எந்தன் சேவை
    இதயம் என்பது ரோஜாவானால் நினைவே நறுமணமாகும்
    இதயம் என்பது ரோஜாவானால் நினைவே நறுமணமாகும்
    எங்கே இதயம் அங்கே வாழும் அன்பே என்னை ஆளும் (நான் உங்கள் வீட்டுப் பிள்ளை)

    கோவில் என்றால் கோபுரம் காட்டும்
    தெய்வம் உண்டு அங்கே
    உள்ளம் என்றால் உயர்ந்து காட்டும்
    எண்ணம் வேண்டும் இங்கே
    கோவில் என்றால் கோபுரம் காட்டும்
    தெய்வம் உண்டு அங்கே
    உள்ளம் என்றால் உயர்ந்து காட்டும்
    எண்ணம் வேண்டும் இங்கே
    பிறந்த நாடே சிறந்த கோவில்
    பேசும் மொழியே தெய்வம்
    இதை மறந்திடாமல் வாழ்ந்து வந்தால்
    கோபுரமாகும் கொள்கை
    (நான் உங்கள் வீட்டுப் பிள்ளை )

    உனக்கொரு பங்கும் எனக்கொரு பங்கும்
    உலகில் நிச்சயம் உண்டு
    ஒவ்வொரு மனிதன் உழைப்பினாலும்
    உலகம் செழிப்பதுண்டு
    எது வந்தாலும் ஏற்றுக் கொண்டால்
    துணிவே துணையாய் மாறும்
    இளையோர் கூட்டம் தலைமை தாங்கும்
    பூமியே புதிய பூமி
    இளையோர் கூட்டம் தலைமை தாங்கும்
    பூமியே புதிய பூமி
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நெத்தியிலே பொட்டு வச்சேன்
    நெஞ்சை அதில் தொட்டு வச்சேன்


    திரைப்படம்:புதிய பூமி
    இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்
    இயற்றியவர்:பூவைசெங்குட்டுவன்
    பாடகர்கள்:பி.சுசீலா


    நெத்தியிலே பொட்டு வச்சேன்
    நெஞ்சை அதில் தொட்டு வச்சேன்
    செவ்வந்திப் பூச்செண்டு சேத்து முடிச்சேன்
    தெம்மாங்குப் பாட்டொன்று தேடிப் படிச்சேன்
    ( நெத்தியிலே )


    கட்டாத பூப்பந்து தள்ளாடுது
    கருவண்டு மேலாக நின்றாடுது -
    வண்ணப்பாவாடை காலோடு விளையாடுது -
    வெள்ளிப்பாலாடை போல் உடல் தடம் போடுது -
    அதைப்பார்த்து பார்த்து
    கண்ணும் நெஞ்சும் கடை போடுது
    எது தடை போடுது ?
    ( நெத்தியிலே )


    தித்திக்கும் தேனாறு உண்டாகுது
    ஜில்லென்ற காற்றோடு கரையேறுது
    நீராடும் மேலாடை தாலாட்டுது -
    அதுநேர் வந்து நெஞ்சைத் தொட்டு தேனூட்டுது -
    அதைப்பார்த்து பார்த்து
    கண்ணும் நெஞ்சும் கடை போடுது
    எது தடை போடுது ?
    ( நெத்தியிலே )
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நான் தாண்டி காத்தி
    நல்ல முத்து பேத்தி


    திரைப்படம்:புதிய பூமி
    இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்
    இயற்றியவர்:பூவைசெங்குட்டுவன்
    பாடகர்கள்:பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி


    நான் தாண்டி காத்தி
    ஆஆஆஆஆஆஆஆஆஆ
    நல்ல முத்து பேத்தி
    ஹோய்
    நான் தாண்டி காத்தி
    நல்ல முத்து பேத்தி
    ஒத்தையா மொத்தமா எத்தனை பேர் வாரீங்க
    நான் தாண்டி காத்தி
    நல்ல முத்து பேத்தி
    ஒத்தையா மொத்தமா எத்தனை பேர் வாரீங்க
    ஒத்தையா மொத்தமா எத்தனை பேர்வாரீங்க
    ஆஆஆஆஆ .....ஓஓஓஓஓஓஓ ... ஹோய்...


    ஊடுருவிப் பாஞ்சாலும்
    ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
    உருட்டி உருட்டி முழிச்சாலும்
    ஊடுருவிப் பாஞ்சாலும் உருட்டி உருட்டி முழிச்சாலும்
    கிளிக் கட்டு ஆட்டத்திலே புலிக் குட்டி நானடியோ
    கிளிக் கட்டு ஆட்டத்திலே புலிக் குட்டி நானடியோ
    அடி ராக்கம்மா மூக்கம்மா ராப் பகலா தூக்கமா
    ராக்கம்மா மூக்கம்மா ராப் பகலா தூக்கமா
    ராக்கம்மா மூக்கம்மா ராப் பகலா தூக்கமா


    நான் தாண்டி காத்தி
    நல்ல முத்து பேத்தி
    ஒத்தையா மொத்தமா எத்தனை பேர் வாரீங்க
    ஒத்தையா மொத்தமா எத்தனை பேர்வாரீங்க
    ஆஆஆஆஆ .....ஓஓஓஓஓஓஓ ... ஹோய்...


    முன்னே வச்ச காலை இங்கே
    நீங்க முன்னும் பின்னும் வைக்கலாமா
    முன்னே வச்ச காலை இங்கே
    நீங்க முன்னும் பின்னும் வைக்கலாமா
    உப்பெடுக்க வந்தவங்க தப்பெடுக்கப் போகலாமா
    அடி ராக்கம்மா மூக்கம்மா ராப் பகலா தூக்கமா
    ராக்கம்மா மூக்கம்மா ராப் பகலா தூக்கமா
    ராக்கம்மா மூக்கம்மா ராப் பகலா தூக்கமா


    நான் தாண்டி காத்தி
    நல்ல முத்து பேத்தி
    ஒத்தையா மொத்தமா எத்தனை பேர் வாரீங்க
    ஒத்தையா மொத்தமா எத்தனை பேர்வாரீங்க
    ஆஆஆஆஆ .....ஓஓஓஓஓஓஓ ... ஹோய்
     
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    விழியே விழியே உனக்கென்ன வேலை
    விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை

    திரைப்படம்:புதிய பூமி
    இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்
    இயற்றியவர்:கண்ணதாசன்
    பாடகர்கள்:டி.எம்.சௌந்தரராஜன்,பி.சுசீலா


    விழியே விழியே உனக்கென்ன வேலை
    விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை
    தூது சொல்லடி மெதுவாக - நீ
    தூது சொல்லடி மெதுவாக
    இளம் தோள்களிலே அசைந்தாடட்டுமா
    நெஞ்சை கேட்டுச் சொல்லடி சுவையாக

    விருந்து என்றாலும் வரலாம் வரலாம்
    மருந்து தந்தாலும் தரலாம்
    இதில் நாளை என்ன நல்ல வேளை என்ன
    இங்கு நான்கு கண்களூம் உறவாட...
    இங்கு நான்கு கண்களூம் உறவாட...

    கன்னம் என்னும் ஒரு கிண்ணத்திலே
    கறந்த பாலிருக்கும் வண்ணத்திலே
    கரும்புச் சாறு கொண்டு வருவாயோ
    கிளியே கொஞ்சம் தருவாயோ
    கேட்டுத் தருவது சரிதானா
    கிளியின் சொந்தம் என்ன அதுதானா
    பாலும் பழமும் தேனும் தினையும்
    நாலும் தருவேன் மேலும் தருவேன்
    என்ன வேண்டும் இன்னும் சொல்லலாமா (விழியே)

    காவேரிக் கரையின் ஓரத்திலே
    தாலாட்டும் தென்றல் நேரத்திலே
    கலந்து பேசிக் கொள்ள வருவாயோ
    கனியே கொஞ்சம் தருவாயோ
    ஆற்றங்ரை என்ன அவசியமா
    அதிலும் சொந்தம் என்ன ரகசியமா
    தேதி குறித்து ஊரை அழைத்து
    காலம் அறிந்து மாலை அணிந்து
    தர வேண்டும் தந்து பெற வேண்டும் (விழியே)
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    திரைப்படம்:புதுமைப்பித்தன்

    தில்லானா பாட்டு பாடி குள்ள தாரா

    திரைப்படம்:புதுமைப் பித்தன்
    இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்
    இயற்றியவர்:tn ராமய்யா தாஸ்
    பாடகர்கள்:சந்திரபாபு, ஜிக்கி

    தில்லானா பாட்டு பாடி குள்ள தாரா
    இங்கு குல்லா நீ போடாதே குள்ள தாரா
    வில்லாதி வில்லரெல்லாம் வம்பு காரா
    வில்லாதி வில்லரெல்லாம் வம்பு காரா
    எந்தன் விழியாலே பலியாவார் வம்புக்காரா
    அய்யய்யோ ....
    விழியாலே பலியாவார் வம்புக்காரா

    தில்லானா ... தில்லானா ...
    தில்லானா பாட்டு பாடி குள்ள தாரா
    இங்கு குல்லா நீ போடாதே குள்ள தாரா

    ஆ ..ஆ ..ஆ . ஆ ....
    அந்த மாமுனிவரெல்லாம் அடங்கினார் ...
    அந்த காலம் ...
    ஆ ..ஆ .ஆ .ஆ .ஆ ..ஏ ..ஏ ..ஏ ...
    அதை அறிந்ததால் உங்கள் விழியினாலே
    ஆண்கள் அசைய மாட்டார் இந்த காலம் ...

    தில்லானா பாட்டு பாடி குள்ள தாரா
    இங்கு குல்லா நீ போடாதே குள்ள தாரா

    வாழைப்பழம் வேண்டாமென்னும் குரங்கு போலே
    வாயளவில் பேசிடுவார் .... பிறகு
    வைத்தியர் அறியாத பைத்தியம் பிடித்தேங்கி
    வலிய வந்து காலில் விழுவார்

    ஆ ..ஆ .ஆ .ஆ .ஆ ....
    வில்லாதி வில்லரெல்லாம் வம்பு காரா
    வில்லாதி வில்லரெல்லாம் வம்பு காரா
    எந்தன் விழியாலே பலியாவார் வம்புக்காரா

    அப்படியா ...
    பின்னே எப்படியாம் ...

    நீரில்லாத நிலமில்லே
    நிலமில்லாத மரமில்லே
    மரமில்லாத விதை இல்லே
    விதை இல்லாத மரமில்லே
    ஆணில்லாத பெண் இல்லே
    பெண் இல்லாத ஆணில்லே

    புரிஞ்சிதா ....
    புரியுதே ...
    புரியுதே புரியுதே ...

    மலையான எம்மனச குள்ள தாரா
    அறிவு உளியாலே பேத்துட்டியே குள்ள தாரா
    மலையான எம்மனச குள்ள தாரா
    அறிவு உளியாலே பேத்துட்டியே குள்ள தாரா
    கல்லான ஆம்பிள்ளையும் வம்புக்காரா
    கோவை கனியாலே பலியாவார் வம்புக்காரா
    கனியாலே பலியாவார் வம்புக்காரா

    தில்லானா ... தில்லானா ...
    தில்லானா பாட்டு பாடி குள்ள தாரா
    இங்கு குல்லா நீ போடாதே குள்ள தாரா
     

Share This Page