சாலையோரக் கடையில் கண்ணாடிக் குடுவையில் சூடான தேநீர் வாங்கி பெருவிரல் குடுவையின் மேல் வைத்து மற்ற விரல்கள் குடுவையின் கீழ வைத்து குடுவையை தாங்கி பிடித்து ஊதி ஊதி சூட்டை குறைத்து தேநீர் அருந்தும் சுகம் அம்மம்மா சுகமோ சுகம் சொல்லில் புரியாது சுகம் அருந்தினால் தெரியும் சுகம் மாலை நேரத்தில் உணவகம் சென்று வாழை இலையில் பஜ்ஜி வாங்கி தேங்காய் சட்னியில் தோய்த்து தோய்த்து சுவைத்த பின் சுக்கு காப்பி அருந்தினால் கிடைக்கும் இதம் மிக உன்னதம் சுவைத்து பாருங்கள் சுகங்களை பகிருங்கள்
பெரும் சுகம் தேடும் பாதையிலே கிட்டும் இதுபோல் சிறு சுகங்களை பெரிதாய் ரசிக்கும் பக்குவமே பெரும் சுகம் super mmaa
பெரியம்மா, உங்கள் சுகமான வரிகளைப் படித்ததும் எனக்கு மிகவும் பிடித்தமான இந்தப் பாடல் நினைவிற்கு வந்தது. மார்கழிப்பூவே - திரைப்படம் மே மாதம். வரிகள் வைரமுத்து. இசை ஏ.ஆர்.ரஹ்மான் . அந்தக் காட்சியில் வரும் கதாநாயகி தன் தந்தையால் மிகவும் கட்டுக்கோப்பாக வளர்க்கப்பட்டப் பெண். அதிலிருந்து வெளியேறும் ஏக்கத்துடன் தன்னுடைய சுதந்திரச் சிறகைக் கற்பனையில் விரித்தபடி ஆசைகளை வெளிப்படுத்தும் அழகான காட்சி. "நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன் நடைபாதைக் கடையில் தேநீர் குடிப்பேன்" என்று அந்தப் பாடலில் வரும் வரிகளுக்கு ஏற்றாற்போன்ற அநுபவத்தைக் கொடுத்தது போல் தோன்றியது உங்கள் வரிகள். அந்தக் கதாநாயகி தன்னுடைய ஆசைகளை ஒவ்வொன்றாய் நிறைவேற்றிக் கொண்ட போது இப்படித்தான் உணர்ந்திருப்பாள், இல்லையா ?
அருமையான சுகம். காப்பி அருந்தும் போது அமைதியாக கண்ணை மூடி அதன் ஒவ்வொரு துளியின் சுவையையும் ரசிப்பேன். அப்போது வெளியே கேட்கும் பறவைகளின் சத்தமோ இதம். Simple pleasures of life.
நன்றி பவித்ரா ஆசை அறுமின் என்று நீங்கள் சொன்னீர்கள் .என்னால் இந்த சிறிய ஆசையை கூட விட முடியவில்லை இருபது அறுபதாக கவிதை எழுத அறுபது இருபதாக எழுதுகிறது .விந்தையான மனம்