காற்றாலே மரமாட நட்ட நாற்றோடு வயல் கண்டு ஊற்றெடுக்கும் நீர் போல பெற்றேன் நான் பரமசுகம் ! குயில் பாடும் பாட்டுக்கு மயில் தோகை விரித்தாட கயலூறும் நதி கண்டேன் மயக்குதம்மா இயற்கை வளம் ! மாலையிலே பூத்திருக்கும் நற் சோலையிலே தவழ் தென்றல் வேலைக்குப் பின் ஓய்வெடுக்க ஓலை விடும் - ஆனந்தம் ! குங்குமம் காலையிலும் ஒளிர் தங்க மஞ்சள் மாலையிலும் அங்கத்திலே பூசும் வான மங்கை காண கோடிபெறும் ! உள்ளமெல்லாம் அமைதி பெற வெள்ளிக் கிரணம் தாலாட்ட கொள்ளை கொள்ளுமந்த நிலா துள்ளி வரும் இன்பக்கனா ! Regards, Pavithra