காதல் தாகம் (16Jul2009) மாதங்கள் பல ஏக்கத்தில் கழித்து காத்திருந்தேன் பல கனவோடு கண்ணாளன் உன் காதல் ஆற்றில் நீராட.. மாதங்கள் கழிந்தன என் மனதில் நம் காதல் மோகமும் வேரூன்றி வளர்ந்தது.. இறுதியில் நம் நெஞ்சில் அலைபாய்ந்த நாளும் வந்தது.. என் நடுக்கம் குறைத்திட மோகம் தூண்டிட உன் இதழால் என் இதழினை தீண்டி என்னுள் தீ ஊட்டினாய்! என் நாணம் மறைந்திட காற்றுக்கு இடமின்றி என்னை நெருங்கி என் அங்கம் முழுதும் இதழால் தீண்டி கரத்தால் இடையை உரசினாய்! நானோ வெட்கப் பூட்டை திறந்து நெருங்கினேன் நீயோ ஏனோ தயக்கத்துடன் விளகினாய்.. உறங்கினாய் நிம்மதியாய் என் விழி அசர்ந்தாலும் உள்ளம் உறங்கவில்லை! தனிமை நாட்கள் நீளுதே நம் காதல் தீயும் மோகத் தீயும் என்னை வதைக்கிறதே! -தேவி @ பூஜாஅருண்.