சந்தனமரப் பிள்ளையார் மிகமிக அபூர்வமான மூர்த்தி, சதுர்த்தி, சதுர்த்தசி திதிகளில் பசும்பால் அபிஷேகம் செய்து ஏழைக் குழந்தைகளுக்கு அளித்திடுக! அரிய அபூர்வ சாதனைகளைப் பெற்றுத் தரவல்லது! புதிய வியாபாரம் நன்கு நடைபெறவும், விளையாட்டில் பதக்கங்கள் பெறவும், தேவையான உத்யோக உயர்வைப் பெறவும் அருள்வழியில் செல்லவும் சந்தன மர கணபதி அருள்பாலிக்கின்றார். சந்தன மரத்தினடியில் தர்பைப் பாயிட்டு அமர்ந்து தியானம் பயின்றிடில் அற்புதசக்திகள் கிட்டும். தோல் நோய்களைக் குணமாக்கும் அற்புத மூர்த்தி இவர்.