இமைகளினுள் இத்தனை கனமா? நீ அதில் உறங்குவதாலா அன்பே? உறக்கம் இன்றி தவிக்கிறேன் நானே! இதுவும் ஒரு காதல் வரம் தானே! விளையாட்டாய் பேசிய நட்பு.... இன்று உயிர் வரை பாய்ந்தது ஏனோ? இதுவும் ஒரு காதல் வரம் தானோ? எனை மறந்து தவிக்கிறேன் நானே! விழி நீர் இறங்க... அனுமதியேன் என்றாய்! அந்த விழிகளுக்கும் கட்டளை இடும்...! என் அன்பே நீ என்னவன் ஆனாய்! பாசம் இது என்றாய்! நேசம் இது என்றாய்! காதல் வரம் பெற்ற எனக்கு....! இது அத்தனையும் இலவசமாய் தந்தாய்! உயிர் என்னவென்று பார்த்ததில்லை யாரும் என் உயிரே நீ இருக்க.... அதை பார்த்து மகிழ்கிறேன் நாளும்! கோடி பணம் இருந்தும்! அன்பு இல்லை நாளும்...! என்று வருந்தும் மக்கள் இடையில் எனக்கு வரமாய் கிடைத்தாய் நீயும்! நேற்று பொழுது தனில் உன் முகம் பார்க்க மறந்தேன் நேற்று பொழுதும் எனக்கில்லை! என்று எண்ணி கொண்டேன் நானே ! கண்ட முதல் நாளில் என் மனம் பறித்தாய் கண்ணா! உன்னை காணும் வரம் இன்றி....! என் காதல் தாங்குமா மன்னா ? உணர்வோடு கலந்த இந்த காதலும்....! மறைந்து விடாது என்றும்...! வளர்பிறையாய் அதை வளர்க்க.... என் உயிர் நீ இருந்தால் போதும்!