காதலின் பொன் வீதியில் என்னுடைய இதழ்களிலே உந்தன் பெயர் ஒலித்திருக்குமே என்னுடைய விழிகளிலே உந்தன் முகம் நிலைத்திருக்குமே முதன் முதலாய் உன்னைக் கண்டது மறந்திடவே முடியாதது இதழ்கள் மூடி நீ சிரித்தது நினைத்திடவே இனிப்பானது உன்நினைவு என்குருதியில் எந்த நாளும் கலந்திருக்குமே என்னுடைய விழிகளிலே உந்தன் முகம் நிலைத்திருக்குமே நீ நடக்கும் பாதையில் நான் பூவாக இறைந்திருப்பேன் நீ நடக்கும் பாதை எல்லாம் நிழலாகத் தொடர்ந்திருப்பேன் உன்நினைவு என்குருதியில் எந்த நாளும் கலந்திருக்குமே என்னுடைய விழிகளிலே உந்தன் முகம் நிலைத்திருக்குமே வீயார்