போகும் வழியெல்லாம் அவளிடம் பேசுவதா வேண்டாமா? என்று யோசித்தபடியே வந்தவனிடம் கௌரியும் பேசினாள் இல்லை! அவளுக்கு மட்டும் ரெக்கை இருந்திருந்தால் கௌதமனிடம் பறந்து சென்றிருப்பாள். எப்படியோ மூளையை உபயோகித்து அவனை சந்திக்க ஏற்பாடு செய்து விட்டாள் ஆனால் இப்போது அவனிடம் எப்படி பேசுவது? எதிலிருந்து ஆரம்பிப்பது என்று அவளுள் ஒரு போராட்டமே நடந்து கொண்டிருந்தது. அதை அறியாமல் அவளருகே அமர்ந்திருந்தவன் வண்டியை அந்த பண்ணை வீட்டின் முன் நிறுத்தி பேச ஆரம்பிக்கும் முன் அவசர அவசரமாய் இறங்கியவளை விசித்திரமாய் பார்த்தான் சம்பத். இறங்கியவள் எடுத்தவுடன் வேலையாளிடம் கௌத்தமனை பற்றி விசாரிக்கவும் அவனது சந்தேகம் அதிகமானது. இருந்தாலும் அதை வெளிக்காட்டாதவன் என்ன நடக்கிறதென்று பொறுத்து தான் பார்ப்போமே என்று நினைக்க அவன் நினைப்பிற்கு ஏமாற்றமளிக்காமல் நடந்த விஷயங்கள் அவன் குறுக்கு புத்திக்கு தீனி இட்டதாய் அமைந்தது. உள்ளே சென்றவள் நேராய் கௌத்தமனை காண தான் சென்றாள். கௌத்தமன் முதலில் கௌரியை சற்றும் எதிர்பார்க்கவில்லை! அதிலும் அவள் ஓடி வந்து தன்னை அணைப்பாள் என்று கனவும் கூட காணாதபோதும் நடந்தென்னவோ அது தான்! தன்னை வந்து அணைத்ததோடு அல்லாமல் அவள் பேசியது அவன் கோவத்தை இன்னும் பலமடங்கு அதிகரித்தது. "உங்கள பாக்காம நான் எம்புட்டு தவிச்சு போயிட்டேன் தெரியுமா? தயவு பண்ணி எங்கப்பாரு கிட்ட வந்து பேசி இப்பவே என்னையும் உங்களோட கூட்டிட்டு போயிடுங்க" என்றவளை விடாபிடியாய் தன் வசம் இருந்து விளக்கியவன் கோபத்தையும் வெளிபடையாகவே காட்டினான். "உனக்கென்ன பைத்தியமா கௌரி? யாராவது பார்த்தா என்ன ஆகறது?" என்று அவள் தோள்களை பிடித்து உலுக்கினான். "என்ன மன்னிச்சுகிடுங்க..ஆனா இம்புட்டு நாள் உங்கள பாக்காம நான்...ரொம்ப...அதான்..." என்று சொல்ல முடியாமல் தவித்தவளை அடிக்குமளவு கோவம் வந்தாலும் கைகளை மடக்கி தன் கோவத்தை கட்டுபடுத்தினான். அதை கவனித்துவிட்டவளுக்கு அவனது இந்த கோவத்தின் காரணம் தான் விளங்காததாய். "நான் மரியாதையா சொல்லும் போதே இங்க இருந்து போயிடு...ஏதோ சின்ன பொண்ணு சொன்னா புரிஞ்சிப்பன்னு பார்த்தா நான் அவ்வளவு சொன்ன பிறகும் இப்படி வந்து என்னை கட்டிபுடிக்க உனக்கு வெக்கமா இல்லை..? நான் சினிமா நடிகன் பார்க்க அழகா இருக்கேன்னு என் மேல ஆசை பட்டு பின்னாடியே வெக்கத்தவிட்டு சுத்தற மத்த பொண்ணுங்க மாதிரி நீயும் இருக்க மாட்டேன்னு நம்பி தான் உன்னோட பழகினேன் ஆனா நீயும் அப்படி தான்னு நிரூபிச்சுட்ட..சே..." என்று வார்த்தைகளை அமிலமாய் உமிழ்ந்தான். "என்ன சொன்னீங்க? எங்க என்னைய பாத்து மறுபடி சொல்லுங்க.." என்று கண்களில் நீரோடு கேட்டவளின் முகத்தை பார்க்க விரும்பாதவனாய் திரும்பியவண்ணமே பேசினான். "உன்கிட்ட தான் சொல்றேன்...! கொஞ்சமாச்சும் மூளை இருந்தா இது நடக்குமான்னு யோசிச்சிருப்ப அதை விட்டுட்டு அதிகமா ஆசைபட்டா இப்படி தான் அடிபட்டு நிக்கணும். இத்தோட முடியட்டும் நமக்குள்ள இருக்க இந்த உறவு...இனி மறந்தும் கூட உன் முகத்தை பார்க்க நான் விரும்பல! போறியா இங்கிருந்து?" என்று வெளியே கைகாட்டியவனை அதிர்ச்சியாய் பார்த்துகொண்டு அவள் நிற்க அவள் நகரபோவதில்லை என்பதை உணர்ந்தவனாய் அவனே சே! என்று சலித்தபடி வெளியேறி சென்றான். தன் இரு கால்களில் நிற்ப்பதுமே பலகீனமாய் இருக்க அப்படியே மடிந்து அமர்ந்தவளின் உடலும் உள்ளமும் சேர்ந்து சோர்ந்தது. இவனை போய் மலையை போல் நம்பினேனே! கடைசியில் என்ன வார்த்தை சொல்லி விட்டான்?. காதல் என்று தான் புனிதமாய் நினைத்ததையும் சேர்த்தல்லவா கேவலமாய் பேசி விட்டான்..என்று நினைக்க நினைக்க நெஞ்சம் குமுறியது. நெஞ்சத்தில் மலை போல் வளர்ந்து நின்ற அவன் மேலான காதல் ஒரே நொடியில் தரைமட்டமாய் மண்ணோடு மண்ணாவதை உள்ளுக்குள்ளேயே உணர்ந்து கொண்டிருந்தவள் தன் வலியை கண்நீரல்லாது வேறு எந்த வழியிலும் வெளிபடுத்த முடியாமல் திண்டாடி கொண்டிருக்க இங்கே அனைத்தையும் மறைந்திருந்து பார்த்து கொண்டிருந்த மற்றவன் தனக்குள்ளேயே புன்னகைத்து கொண்டிருந்தான்.
hi yams.. nice update.. gowtham pesunadhu kettu gowri shock aitta.. gowri paavam ma.. sampath edhavadhu gowri ku problem create pannuvana???
hi yams.. hw r u da? very nice updates da.. Gowri romba paavam da.. atleast mogana oru chinna hint kuduthu iruntha iva ivalo kasta pada maattaa.. ithula sambath vera villathanamaa sirikkuraan.. naalaiku paper la yethum kisu kisu kuduthuruvaano! ayyo paavam gowri.. Goutham ku yeppo gowri mel kathal varum? eagerly waiting da.. -devi.
Hi Yams, Pavam pa Gowri.. Gowtham eppo gowri ya purinchuka poran nu theriyalaiye... Eagerly waiting for that.... Regards, S.Uma
Hi yams, I am a silent reader of your stories this is the first time i am posting my comments. Eagerly waiting for the next update ma