அன்பு தோழமைகளுக்கு, சில சமயங்களில் என்னுள் தோன்றிய சில கவிதைகளை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்...படித்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.. எதிரில் நீ வருகிறாய் என் மனதை விட்டு காட்சிப்பிழை ... ************** பிரபஞ்ச பெருவெளி சிறிதுதான் உன் நினைவுகளை விட ... ************** வேரூன்ற தேடி திரிகையில் நழுவுகிறேன் மண்புழுக்கூட்டம்...
அருமை பானு ! //எதிரில் நீ வருகிறாய் என் மனதை விட்டு காட்சிப்பிழை ...// காட்சி பிழைக்கு அருமையான விளக்கம் ! அவன் மனதை விட்டு வந்தாளா ? என்று நினைக்கும் போதே அடுத்த வரி சிலிர்ப்பு ! அவன் நினைவு பெருவெளியை விட இந்த பிரபஞ்ச வெளி சிறிது தான் ! கவிதையை விளக்குமாறு கேட்க கூடாதுதான் ஆனால் எனது சிற்றறிவுக்கு இதன் அர்த்தம் புலப்படவில்லை பானு ! //வேரூன்ற தேடி திரிகையில் நழுவுகிறேன் மண்புழுக்கூட்டம்.// விளக்கம் கிடைக்குமா ? கண்டிப்பாக மேலும் பதிவிடுங்கள் தோழி !
ப்ரியா, வாழ்த்துக்கு நன்றி .. ப்ரபஞ்ச பெருவெளி சிறிது தான் என் மனதில் இருக்கும் நினைவுகளை விட... இது இரண்டாவது கவிதைக்கான விளக்கம்.. நானே என்னை மரமாக பாவித்து என் வேர்களை மண்ணில் வேரூன்ற தேடி அலைகிறேன்.. ஆனால் மண்புழுகூட்டம் சிதைந்து விடுமே என்று என் வேர் பிடிமானத்தை நழுவ விடுவதாக எழுதியிருக்கிறேன் தோழி.. ஹைக்கூ வில் என் முயற்சி இது .. அடுத்த முறை எல்லாருக்கும் புரியும் படி எழுதுகிறேன்..
மண்புழு கூட்டம் மண் இறுக்கத்தை சிதைப்பதினால்தான் வேர் உள் செல்ல ஏதுவாகிறது ! அதனால் பிடிமானத்தை நழுவ விட வேண்டாம் விருட்சமே ! ஹேய் என்னப்பா ......நீங்க எழுதறது அழகு ! என்னோட சிற்றறிவுக்காக உங்க கவிதைய எளிமை படுத்த வேண்டாம் ! அந்த அழகு குறைஞ்சுடும் !
ப்ரியா, நன்றிகள்ப்பா உங்களுக்கு, எனக்கு கிடைத்த இந்த பிடிமானத்தை நழுவவிடமாட்டேன், நிச்சயமாக... என் பாணியிலேயெ கொடுக்க முயற்சி செய்கிறேன் தோழி...
நீயில்லாமல் இருளை ஓளியால் மறைக்கும் மெழுகுவர்த்தி போல் நீயில்லாத நாட்களை உன் நினைவுகளால் மறைக்கிறேன் நேரம் கூட கணக்கிறது நீயில்லாத நாட்களில் ரயில் நிலையத்தில் நீ எதிரில் வரும் போது வரும் கண்ணீர் நீயறிய கூடாதென கண்களால் விழுங்குகிறேன்...