கண்டேன் கண்டேன் கவிதை சோலையில் கானம் பாடிய குயில்களை தேவப்ரியா யாமினி வைஷ்ணவி கல்வி கடலில் மூழ்கிய குயில்கள் திரும்பி வந்தன கவிதை முத்துகளுடன் சோனியாவின் சமையல் கவிதை அன்பு கணவரை பற்றிய காதல்கவிதை கேட்க கேட்க தெவிட்டாது ஆன்மிகம்,குடும்பம் என்று அனைத்திலும் பரிமளிக்கும் ஸ்ரீனியின் கவிதை அனைவருக்கும் ஈடு கொடுத்து கிண்டல் கவிதைகள் எழுதும் கில்லாடி நண்பர் நட்ஸ் வேணி சரோஜ் கார்த்திகா எங்கே உங்கள் கவிதைகள் கண்டு ரசிக்க காத்திருக்கும் ஐயல் உள்ளங்களில் நானும் உண்டு
ருக்மனிம்மா நல்லா சொன்னீங்கம்மா. ஆக்சுவலா அவங்க காலேஜ் போனப்ப நிறைய எழுதினாங்க. இப்ப கோர்ஸ் முடிச்சவுடன மத்த வேலைல ரொம்ப பிசி ஆயிட்டாங்க. வேணி, சரோஜ், கார்த்திகா பிசியா இருக்கற மாதிரி ஆக்ட் குடுக்கறாங்க. நா மட்டுந்தான் வெட்டியா திரியற கோவில் மாடு மாதிரி வலம் வந்துட்டு இருக்கேன்.
அம்மா....அவங்க எல்லாம் இந்த அழைப்பைக் கண்டு விரைவில் எழுதட்டும்!!! உங்க கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயமே இது தான் நட்ஸ்.....மத்தவங்க எங்க வாரீருவாங்களோ ன்னு முந்திகிட்டு உங்களுக்கு நீங்களே ஆப்பு வெச்சுக்குறது
Rukmini dear they must be busy due to summer holidays, will come back soon after their holidays. Enjoyed readin your poem
இங்கு வரும் கவிக் குயில்களைப் பற்றிய உங்களது கவிதை புதுமை மா!! கவியின் இன்பம் அவர்களை இங்கே சுண்டி இழுக்கும் மா!! நிச்சயம் வருவார்கள் புதுக் கவிதையுடன்...நானும் உங்களைப் போல் காத்திருக்கிறேன்!!