1.பகல் ஏன் தான் வருகிறது என்று நினைப்பதுண்டு அதன் பின் இரவு வந்தால் தானே ஒரு விடியல் பிறக்கும் ஆண்டவனின் படைப்பே சுவாரஸ்யமானது தான்..... பகல் - இரவு, சந்தோஷம்- துக்கம், இனிப்பு-கசப்பு! இதை அனுபவிக்க நமக்கு தான் நேரம் இல்லையோ? 2.கலை ஆர்வம் என்பது ஒன்றன் பின் ஒன்று முளைத்த சிறகா? நீண்டு கொண்டே செல்கிறதே? இதற்கு அளவுகோல் தான் என்ன? ஒன்றுகொன்று போட்டி போட்டுக் கொண்டு மனதை கொள்ளை அடித்து செல்கிறதே!!! 3.வீட்டுக் கண்ணாடியில் முகம் பார்க்கும் போதெல்லாம் ஒரு கேள்வி வருவதுண்டு... நம் உள்மனதை காட்டிக் குடுக்குமோ என்று? ஏனென்றால் நம்மை முழுமையாய் அறிந்தவை அது ஒன்று தானே! 4.வாசலில் கோலம் போடும் போதெல்லாம் காக்கை வந்து அரிசி மாவு உண்ணும் பழக்கம் உண்டு ஆனால் அது வராத போது ஏன் என்று நினைப்போம்? அப்போது தான் தோன்றியது நாம் காக்கைக்கு தினமும் உணவு வைத்து விட்டு உணவு உண்ண ஆரம்பிக்கிறோமா என்று? 5.காதலுக்காக அம்பிகாபதி-அமராவதி, ரோமியோ-ஜூலியட் பேர் சொல்லுவார்கள்.....ஆனால் இன்று நீதிமன்ற படிகளில் அல்லவா உண்மை காதலை தேடிக் கொண்டு இருக்கிறார்கள்? 6.இறங்குவதும் ஏறுவதும் தான் வாழ்க்கை இவ்விரண்டிற்கும் காரணத்தை தெரிந்து கொண்டு புரிந்து நடந்தால் வாழ்க்கை இன்பமயம் தான் 7.வானம் போல் தன் வாழ்க்கையில் உயர்ந்த நோக்கம், சிந்தனைகள் உடையவன் தான் நினைத்ததை சாதிக்கிறான். 8.எனக்காய் துடித்த இதயம் அது உனது மட்டுமே என் சந்தோசம், படிப்பு கல்யாணம்...... என்னுடைய முதல் தோழியாய் இருந்து என்னை கரை சேர்த்தவள் நீ! அம்மாவின் இதயம் பற்றி சொல்லி தான் தெரிய வேண்டுமா என்ன? ----ஸ்ரீவித்யா