கற்பகமே என் அன்பு கற்பகவிருட்சமே எங்கு மறைந்தாய் நீ உன் வார்த்தை ஜாலத்தால் எங்களை மகிழ்வித்த நீ இன்று அழ விட்டு சென்று விட்டாயே அம்மா உன் இன்னல்களை மறைத்து விட்டு உன் பிள்ளைகளுடன் கூடி குலவினாயே பிரிந்து செல்லவா இத்தனை அன்பு காட்டினாய் நீ கொடுத்த சங்கேத குறிப்புகளை புரிந்து கொள்ளாமல் விட்டு விட்டோமே உன் அன்பு எனும் மாய கயிற்றால் எங்கள் கண்களை மறைத்து விட்டாயே சிறிது காலம் உறவாடி எங்கள் சிந்தை எங்கும் கலந்து நிற்கும் நீ எங்கள் சித்தம் கலங்க வைத்து விட்டாயே கற்பகமே இது கவிதை அல்ல எங்களில் ஒரு அங்கமாக இருந்த அன்பு கற்பகவிருட்சத்துக்கு சமர்ப்பணம் . இதை படிப்பவர்கள் fb கொடுக்க வேண்டாம் .கற்பகத்தின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்க வேண்டுகிறேன்